வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

புதன், 2 டிசம்பர், 2009

கவிதை 39 . இரண்டற கலந்ததே வாழ்க்கை :

கவிதை 39 . இரண்டற கலந்ததே வாழ்க்கை :

பகலில்லாமல் இரவுகள் மட்டும்
இங்கு ஏது?

வெயிலில்லாமல் குளிர்கள் மட்டும்
இங்கு ஏது?

துன்பமில்லாமல் இன்பங்கள் மட்டும்
இங்கு ஏது?

மரணமில்லாமல் ஜனனங்கள் மட்டும்
இங்கு ஏது?

எதிரியில்லாமல் நண்பர்கள் மட்டும்
இங்கு ஏது?

நட்பில்லாமல் காதல்கள் மட்டும்
இங்கு ஏது?

உணர்வில்லாமல் மனிதர்கள் மட்டும்
இங்கு ஏது?

நம்பிக்கையில்லாமல் வாழ்க்கை மட்டும்
இங்கு ஏது?

ஒன்றோடொன்று கலந்திராமல் வாழ்க்கை
இங்கு ஏது?

எல்லாமே ஏற்றுக் கொள்ள
மனமிருந்தால்

எது வந்த போதும்
ஏற்றுக் கொள்வாய்.

வியாழன், 26 நவம்பர், 2009

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

மழை பெய்கின்ற வேளையிலே!
மனம் சுடுகின்ற வெயில்
நோக்கி செல்லுது

வெயில் சுடுகின்ற வேளையிலே!
மனம் நனைகின்ற மழை
நோக்கி செல்லுது

சுவை பிறக்கின்ற வேளையிலே!
மனம் கடுக்கின்ற காரம்
நோக்கி செல்லுது

காரம் கடுக்கின்ற வேளையிலே!
மனம் இனிக்கின்ற சுவை
நோக்கி செல்லுது

அளவுக்கு அதிகமானால்
அமிர்தமும் நஞ்சென
சொல் உண்மையன்றே!

மழை மீது நேசம் அதிகமானாலும்!
வெயில் மீது நேசம் அதிகமானாலும்!
உயிர் மீது நேசம் அதிகம்னானாலும்!

உடல் வலிமை இழப்பது நிஜமன்றோ!
உயிர் உடலை இழப்பது உண்மையன்றோ!

நேசம் எல்லா இடத்தும் வைத்திரு!
இருந்தும் எல்லை கடந்த
நேசம் கொஞ்சம் தவிர்த்திரு!.

பொருள் : நாம் எங்கே நேசம் அதிகம் கொள்கிறோமோ,அந்நொடியே நாம் பலவீனம் அடைகிறோம் என்பதே இதன் பொருள்.

புதன், 11 நவம்பர், 2009

1. ரத்ததானம் செய்திடுவேர் :

1. ரத்ததானம் செய்திடுவேர் : ( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )

வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நீயும் பிறந்தாய்
நண்பா
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நானும் பிறந்தேன்

ஓர் நிலையில் ஓர் புள்ளியில்
நானும்,நீயும் சந்தித்தோம்

சந்தித்த நொடியில் உனை பற்றி
சிந்திக்க மனம் செல்ல வில்லை

நாட்கள் நகர நகர
நம் நட்பும் ஆழமானது

எத்தனையோ விவாதங்கள்
நமக்குள் பிறந்தது

ஒன்றிலே நம் எண்ணங்கள்
ஒன்றாகும்
ஒன்றிலே நம் எண்ணங்கள்
வேறாகும்

விவாதங்கள் ஆயிரம் பிறந்தாலும்
எண்ணங்கள் மாறுபட்டு இருந்தாலும்

நம் நட்பென்றும் பிரியாமல்
நம்பிக்கையோடு நடை போட்டது

புத்தகம் படித்தால் தான்
ஞானம் பிறப்பதில்லை

மனித வாழ்வை படித்தாலே
ஞானம் பிறந்திடுமே

ஆம்!உன்னோடு நட்பு கொண்டதினால்
ஓர் உண்மை கண்டேனே

மனித ஓட்டம் ஓட
குருதிஇன்றி ஓர் அணுவும்
அசையாதே

எத்தனையோ பகல்கள்
குருதிக்காக நீ ஓடிய ஓட்டம்

எத்தனையோ இரவுகள்
குருதிக்காக நீ மறந்த தூக்கம்

மொத்தமாய் சுயநலமின்றி
செய்து நின்றாயே

என் எண்ணம் மொத்தமும்
உன்னோடு கலந்து நின்றது
அவ்விடம் தானே

எத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது
எத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது

வாழ்த்திய உள்ளங்களும்
வாழ்ந்த நெஞ்சங்களும்

ஒன்றாகி திரண்டு வந்தால்
நாம்
வசித்த பகுதி தான் திகையுமோ?.

பூமியில் பிறந்தவர் எல்லோரும்
பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்திடலாகாது

இருந்தும் நண்பா

இப்பூவுலகில் உன் பிறப்பிற்கு
நீ தான் அர்த்தம் கொடுத்து
நின்றாயே

படைத்தவனும் உனை கண்டு
பயந்து இருப்பானோ?

எங்கே நீயும் ஓர் நாள்
படைத்தவன் ஆகி விடுவாயோ
என நினைத்தோ

உன்னையும் தன்னோடு விண்ணில்
சேர்த்துக் கொண்டானோ

நண்பா நீ
விண்ணோடு கலந்தாலும்

மண்ணோடு "ரத்ததானம்" எனும்
விதையை விதைத்து

பலர் நெஞ்சில் இன்றும்
என்றும் எங்களோடு வாழ்கிறாயே

--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு :

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு : ( கவிதையாய் ஒரு பாடல் )

மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை

எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)

புதன், 21 அக்டோபர், 2009

கவிதை 35 . படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! :

35 . படைப்புகள் இருப்பது நிஜமெனில் படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! : ( கவிதையாய் ஒரு பாடல்)

யாரோ ஒருவன் ஆட்டி வைக்கிறான்
ஆட்டம் முடிந்ததும் உணர வைக்கிறான்
ஓர் புள்ளியில் தொடங்கி
ஓர் வட்டமடிக்கிறோம்
வட்டம் முடிவிலே வாழ்க்கை
அறிய வைக்கிறான்.

(யாரோ ஒருவன்....)

முதன் முதல் உலகை பார்த்ததும்
அடடா அவனே அழுகிறான்
அவன் அழுகை குரலை கேட்டதும்
மனிதன் இங்கே சிரிக்கிறான்

இறுதியில்
வாழ்வின் இறுதியில்
அவனே இங்கே சிரிக்கிறான்
அடடா மனிதன் அழுகிறான்

மாற்றமே!மனிதன் வாழ்க்கையே!
இதை புரிந்து நீ
வாழ்வில் உயரு நீ

(யாரோ ஒருவன்....)

உடலின் உள்ளே உயிருமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

விதையின் உள்ளே மரமுமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

இருந்தும் நாம்
கண்ணால் கண்டு கொள்கிறோம்
காட்சி கண்ட பின்
உணர்வை அறிந்து நிற்கிறோம்

உழைத்தால் உயர்வு புரியுமே
உணர்ந்தால் காட்சி தெரியுமே

படைப்புகள் இருப்பது நிஜமெனில்
படைத்தவன் இருப்பதும் நிஜமன்றோ?.
(யாரோ ஒருவன்....)

சனி, 17 அக்டோபர், 2009

கவிதை 34 . வரதட்சணை :

34. வரதட்சணை :

பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்கிறானே மனிதன்
இருந்தும் தன்
மெய்ப்பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்வது ஏனோ?

பெண் ஒன்று தேடும் இடத்திலே
பொன் ஒன்றும் அங்கே தேடுகிறான்

எங்கெங்கு ஆண்மகன்கள்
தந்தை சொல்லுக்கு மிரண்டு
தாய் சொல்லுக்கு மகிழ்ந்து
வரதட்சணை எனும் பண நோயை
இசைவுடன் ஏற்றுக் கொள்கிறானோ

அங்கணமே
பொருளற்ற உடலாகிறான்
சிந்தனையற்ற மனிதனாகிறான்

துன்பம் எது வந்திடினும்
இன்பம் எது வந்திடினும்

வாழ்வில் எந்நொடியும்
உன்னோடு ஓர் ஜீவன்
உன் துணையாகிய துணைவியே

ஆண்மைக்கு அழகு
பெண்மையை காப்பது
பொருளை காப்பதல்ல

பெண்ணை விலை பேசி
உன்னை விற்று விடாதே
ஆண்மகனே

பொருள் : சில் ஆண்மகன்கள் தந்தை சொல்லுக்கு பயந்து,தாய் சொல்லுக்கு மகிழ்ந்து வரதட்சணை என்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.இங்கே பொருளற்ற உடலாக அவன் மட்டுமல்ல அவன் பெற்றோரும் உண்டு.வயதில் பெரியவர்கள் எல்லோரும் இங்கே பெரியவர்கள் அல்ல.எண்ணங்களால் உயர்ந்தவர்கள் மட்டுமே இங்கே பெரியவர்கள்.வரதட்சணையை ஒழிப்போம்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கவிதை 33. ராணுவ வீரனே முதல் குடிமகன் :

33 . ராணுவ வீரனே முதல் குடிமகன் : (ஓர் ரயில் பயணத்தின் போது ராணுவ வீரர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்டதை இங்கே கவிதை வடிவில் கொடுத்து இருக்கிறேன்.இது ஒரு உண்மை பதிவு )

எட்டாத உயரமெல்லாம்
எட்டிச் சென்றாய்
குளிர் தொட்டாலும்
நீயே தான்
தொடர்ந்து சென்றாய்

மலை உனை தொட்டாலும்
வெயில் உனை சுட்டாலும்
உயிர் உனை விட்டாலும்

உன் எண்ணம் எல்லாம்
ஒன்றிலே வைத்தே சென்றாய்

இரக்கமில்லா எதிரிகள் ஒரு புறம்
உறக்கமில்லா இரவுகள் மறுபுறம்

குண்டு சப்தத்தின்
ஒலிகள் மட்டும்
அங்கே ஓயாது

ஓயாத சப்தத்தின் நடுவிலே
உயிர் நீத்தது
எதிரியின் உயிர் மட்டுமின்றி
உன்
தோழனின் உயிருமாகும்

இவ்வுண்மை காலங்களால்
சில நேரம் பல பேர்
அறிய முடியாதது
இருந்தும்
அது குற்றமில்லை

நாலு புறமும் எதிரிகள்
சூழ்கையில்
அதை வென்றிட

நாலுபுறமும் ராணுவம்
சூழ்கையில்

எந்தப் பக்கம் எதிரிகள்
எந்தப் பக்கம் ராணுவம்

ஏதுமறியாது தனியாய்
நீ முன்னேறுகையில்

சப்தமில்லா அந்நொடியில்
புதர் நடுவே
மெல்லிய உரசல்கள்
---அது மனித ஊட்டம்
---மனசை சலனப்படுத்துது

எதிரியென நினைத்து
சுட்டுப் பார்க்கையில்
உயிர் நீத்தது
எதிரியல்ல
உயிர் தோழன்
என்கையில்

அந்நிமிடம் நீ
துடிக்கும் துடிப்புகள்
யார் அறிவார் தோழா?.

இருந்தும் முன்னேறுவாய்
எதிரிகளை பந்தாடுவாய்

உன் போல்
சுயநலமில்லா நாட்டுப்பற்று
வேறு எங்கு காண?

யார் யாரோ நாட்டின்
முதல் குடிமகன் என்கிறார்கள்
என்னை கேட்டால்
தோழா
நீயே பாரத நாட்டின்
முதல் குடிமகன்
நீயே இந்நாட்டின்
சுயநலமில்லா பாதுகாவலன்

வாழ்க உன் புகழ்
வளர்க உன் குலம்

ஜெய் ஹிந்த் .....

வெள்ளி, 2 அக்டோபர், 2009

கவிதை 32.தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

கவிதை 32 .தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை

எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே

இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்

வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.

வியாழன், 1 அக்டோபர், 2009

கவிதை 31 . உணர்வுகள் தான் மனிதனே :

31 . உணர்வுகள் தான் மனிதனே :

வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல

வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே பெண்ணுமல்ல

முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்

பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்

வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல

அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே ஆணுமல்ல

முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்

பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்

வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல

சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்

இங்கே மனிதனுமல்ல

முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்

பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.




பொருள் ::::::

தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கவிதை 30 : (30 . எனக்கான முதல் கவிதையும் இது தானோ? ) :

கவிதை 30 : எனக்கான முதல் கவிதையும் இது தானோ?:

என் கவிதையின் முதல் பயணம்
எங்கே உதயமானது?
இன்றளவும் எனக்கு தெரிய வில்லை

என் வாழ்க்கைப் பதிவில்
காயங்கள் நெஞ்சில் பதிய பதிய
வாழ்க்கை கொஞ்சம் புரிய புரிய

என்னை அறியாமலே
என் எண்ணங்கள் செதுக்கப்பட்டு
அவை எழுத்துக்களில் ஈட்டப்பட்டு

கவிதையென்பதில் முதல் அடியை
எடுத்திடவே காரணமானதே

நீரெல்லாம் சேர்ந்து
கடலாய் இருக்கையில்
அதிலே
மீன் அழுதால்
யாருக்கும் தெரிவதுமில்லை

எனது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து
கவிதையாய் இருக்கையில்
அதிலே
என் சோகமும்
யாருக்கும் புரிவதுமில்லை

இருந்தும்

துக்கத்தின் ஒரு பகுதியை
எனது எழுத்துக்களால்
என் காயத்தை துடைத்திடவே
பார்க்கிறேன்

துக்கத்தின் மறு பகுதியை
எனது எழுத்துக்களால்
பிறர் கண்ணீரை தடுத்திடவே
பார்க்கிறேன்

காயங்களிலான வாழ்க்கை
யாருக்கும் வேண்டாம்
நான் நினைக்க வில்லை

இன்பங்கள் போன்று
துன்பங்கள் வந்திடினும்
அவையெல்லாம்
எதிர்கொள்ளும் பக்குவங்கள்
இருந்திடவே நினைக்கிறேன்

துன்பமில்லாமல் இன்பமுட்டும்
வேண்டுமெனில்
மனித பிறப்பும் தேவை தானோ?

என் எழுத்துக்கள் கவிதையாகுதே
இதையெண்ணி
மகிழ்ச்சி கொள்வதா?
இல்லை
என் சோகங்கள் எழுத்துக்கள் ஆகுதே
இதையெண்ணி
வருத்தம் கொள்வதா?.

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பது கவிதைகள்
எவ்வாறோ என்னால்
படைக்கப்பட்டு விட்டது

நான் கவிஞனில்லை
இருந்தும்
எப்படி படைத்தேன்
இதுவரை
எனக்கும் புரிய வில்லை

எத்தனையோ கவிதைகள்
யார் யாருக்காவோ படைத்தேன்
எனக்காக - நான்
படைத்த "முதல் கவிதை"
இது தானே.

கவிதை 29. (மனமென்ன மனமென்ன சொல்லு) ::::

29.மனமென்ன மனமென்ன சொல்லு ::::

மனமென்ன மனமென்ன சொல்லு
உன்
மனசாட்சி படி நீயும் சொல்லு

மனசாட்சி இல்லேனு சொன்னால்
உன்
மனதினை மனதினை கொல்லு

உதவும் எண்ணங்கள் இருந்தால்
மனசாட்சி உனக்குள்ளும் உண்டு
உதவும் எண்ணங்கள் தொலைத்தால்
மனசாட்சி மண்ணுக்குள் உண்டு

பார்வையை நீ கொஞ்சம் தொலைத்தால்
மனதினை நீ கொஞ்சம் தொலைத்தால்
நண்பா
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
நீயும்
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்

உயிரினை நேசிக்க மறந்தால்
நீயும் ஆத்தீகன் என்பவன் இல்லை
நண்பா
நீயும் நாத்தீகன் என்பவன் இல்லை

மனிதனை மனிதனை நேசி
அது உன்னாலே முடியாமல் போனால்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

வெற்றி

இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்

"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது

வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு

தோல்வி

உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்

"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்

தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு

தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்

தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி

தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

My kavithai 27 (27 . நம்பிக்கை விதைகள் ) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

27 th Kavithai : நம்பிக்கை விதைகள் (1st page) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்

(வாழ்ந்திடலாம் ....)

உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ...)

தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே

தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே

தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு

(வாழ்ந்திடலாம் ...)

வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்

மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ....)

திங்கள், 20 ஜூலை, 2009

My kavithai 26 ( 26 . சரீரத்தின் உண்மை ) :

26: சரீரத்தின் உண்மை :

கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை

கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.

கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்

குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே

ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே

அங்ஙனமே

ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே

குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே

தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை

எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு

உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்

திங்கள், 13 ஜூலை, 2009

My kavithai 25 . (25 : இதயமதில் என் பார்வை ) :

25 . இதயமதில் என் பார்வை :

விழியிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் விழியின் ஓர் பார்வையிலே
"நற்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"நற்செயல் தனை செய்திடு"

மறு விழியின் மறு பார்வையிலே
"தீஞ்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"தீஞ்செயல் தனை விட்டுடு"

கையிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் கையின் ஓர் பார்வையிலே
"உனை முழுதும் காத்திடு"
மறு கையின் மறு பார்வையிலே
"பிறர் தனை தூக்கிடு"

காலிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் காலின் ஓர் பார்வையிலே
"நல்லதை எட்டி முன்னேறு"
மறு காலின் மறு பார்வையிலே
"தீயதை எட்டி உதைத்திடு"

எல்லாம் இரு வழிப் பாதையாக
இருந்தும்
இதயமது ஓர் வழிப் பாதையாக
ஆனதேனோ?

இதயமதில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஜீவன் பிறப்பதும் ஓர் முறை தான்
ஜென்மம் சாய்வதும் ஓர் முறை தான்
காதல் உதிப்பதும் ஓர் இடம் தான்
காதல் மறைவதும் அவ் விடம் தான்

காதலது எண்ணிக்கை கூடினால்
அது காதலுமல்ல
நட்பது உறவும் மாறினால்
அது நட்புமல்ல

காதல் ஓர் பெண்ணோடே
பிறக்க வேண்டும்
காதல் அப் பெண்ணோடே
முடிய வேண்டும்

நட்பு அது நட்பாகவே
பிறக்க வேண்டும்
நட்பு அது நட்பாகவே
முடிய வேண்டும்

எண்ணிக்கை கூடினாலும்
உறவுகள் மாறினாலும்
அது நேசம் அல்ல
அது சுயநலத்தின் அடையாளமே

இதயம் ஓர் வழிப்பாதையே
நன்மை மட்டுமே நிலைத்திடும் - இங்கே

திங்கள், 1 ஜூன், 2009

My kavithai 24 : ( 24 . நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர் )

24.நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர்

ஜனனத்தின் வருகையும் அறியாது
இனிவொரு
ஜென்மம் உண்டெனவும் தெரியாது

படைத்தவன் அன்றி
யார் அறிவார்?.

மண்ணில் பிறந்த
யாவருக்கும்
மகத்தான வரம் உண்டென
அறியலாகாது

ஜீவனை உயிர்ப்பிக்கின்ற திறன்
கடவுள் என்போம்
ஆம்
நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்.

கண் தானம் செய்கையில்
காட்சிப்பொருளாய்
நீயே அவனுக்கு கடவுளாகிறாய்

புதன், 27 மே, 2009

my kavithai 23 : (23 . காதல் ஒரு வரமா?. அல்லது சாபமா?. )

23 . காதல் ஒரு வரமா?. அல்லது சாபமா?.

யார் செய்த பாவம் இங்கே
உன் கண்ணில் நான் விழுந்தேன்

யார் செய்த பாவம் அங்கே
என் கண்ணில் நீ விழுந்தாய்

இது காதல் என்பதா
இல்லை சாபம் என்பதா

இது நேசம் என்பதா
இல்லை வேஷம் என்பதா
உயிரே சொல்

மனம் காயமுற்று
தனியாய் இருக்கையில்
என் உள்ளினுள்ளே
உறவாட வந்தாயே

மனக் காயக்கதைகள்
எல்லாம் சொல்லிட
உயிர் மருந்தாவேன்
நீயே சொல்லிட

காதலில் விழுந்தேனே
உன்
காதலால் வீழ்ந்தேனே

பாறையாக என்
மனமே இருக்கையில்

சிற்பியாக நீயே
இங்கு வருகையில்

பாறையும் சிலையானதே
எனதுள்ளமும் உனதானதே

கண் கொண்டு பார்த்தால்
கல் மட்டும் தோன்றும்

மனக்கண் கொண்டு பார்த்தால்
கடவுளே கண்முன் தோன்றும்

ஒன்றல்ல இரண்டல்ல
வாழ்க்கை பதிவின் - பலதிலும்
நம்பிக்கை விதைகளை
விதைத்தேனே

எதன் மீதும் நம்பிக்கை இல்லையெனின்
நானே தந்திடுவேன் நம்பிக்கையினை
என் மீதே நம்பிக்கை இல்லையெனின்
நான் எங்கு போய் காதலை உன்னிடத்தில் தேடுவேன்?.

வாழ்வில் எதுவில்லை எனினும்
ஓர் நொடி கூட வாழ்ந்திடலாம்

நம்பிக்கை இல்லையெனின்
ஓர் நொடி கூட வாழ்ந்திட முடியாது
இதில் காதல் மட்டும் என்ன விதி விலக்கா?.

தனியாக இருக்கையில்
துன்பம்கூட தூசியானது

காதலின் வருகையில்
இன்பம்கூட துன்பமானது

காதல் எனும் மரத்தில்
உள்ளம் எனும் கூட்டை
கட்ட நினைத்தேன்

மரமே சாய்ந்த பிறகு
கூட்டிற்கு என்ன வேலை?

உன்னாலே மீண்டும்
மனம் கல்லானதே

ஓர் நொடி புன்னகையில்
உன்னிடத்தில் தொலைந்தேன்
ஓர்நொடியால் இன்று
என்புன்னகையையே மறந்தேன்

காதல் இது வரமா?. சாபமா?.

ஞாயிறு, 10 மே, 2009

my kavithai 22 : (22. ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம் )

22.ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

அர்த்தமுள்ளதும் ஓர் நொடியில் தான்
ஆயிரமுள்ளதும் ஓர் நொடியில் தான்
அச்சம் வருவதும் ஓர் நொடியில் தான்
அகண்டு நிற்பதும் ஓர் நொடியில் தான்

(ஓர் நொடி போதும் )

மண் ஆசையில் மாண்டு போவதும்
ஓர் நொடியில் தான்

பெண் ஆசையில் பித்தன் ஆவதும்
ஓர் நொடியில் தான்

இதயம் தொலைத்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

நினைவை இழந்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

வார்த்தை தவறி விழுவதும்
ஓர் நொடியில் தான்

வாழ்க்கை மாறி விடுவதும்
ஓர் நொடியில் தான்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

(ஓர் நொடி போதும் )

நட்பினில் யாவரும் வருவதற்க்கு
ஓர் நொடி போதும்

நட்பினில் சிறந்தவன் கிடைப்பதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

நாத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் நொடி போதும்

ஆத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் யுகம் வேண்டும்

காதலில் விழுவதற்கு
ஓர் நொடி போதும்

விழுந்தால் எழுவதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

தவறு செய்திட
ஓர் நொடி போதும்

வாழ்க்கை மாறிட
ஓர் யுகம் வேண்டும்

யுத்தம் பிறந்திட
ஓர் நொடி போதும்

அமைதி திறிம்பிட
ஓர் யுகம் வேண்டும்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

புதன், 28 ஜனவரி, 2009

my kavithai 21 : ( 21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ? )

21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ?

(உடலில் உள்ள குறை எல்லாம் ஊனம் இல்லை,உள்ளம் குறையானால் அது தான் ஊனம் ( அவரும் மனிதர் தான்,நேசிப்போம் அந்த ஜீவனையும் தான்.நண்பர் ஒருவருக்காக படைக்க பட்டது - அவருக்கே சமர்பனம் இது ) ) :

விடையறியா உலகத்தில்
வினாக்களின் கூட்டத்தில்
ஓர் ஜீவனாய்
நாமும் பயணிக்கின்றோம்

விடையறியும் முன்னே
இறங்க நினைக்கையில்
பாதையும் வேறாகி
பயணமும் முடிகிறது

வினாக்களே பிறக்க
வில்லையெனில்
பயணமும் எதற்கோ ?

பாதியில் இறங்கத்தான்
உன் பயணமென்றால்
நீ
பயனியானது ஏனோ?

கண் இருந்தும் பார்வையில்லை
மொழி தெரிந்தும் பேசவில்லை
நடை அறிந்தும் நடக்கவில்லை

வினாக்கள் எத்தனை பிறந்தாலும்
விடையறிய ஓர் ஜீவனாய்
அவனும் பயணிக்கிறான்

அவனுக்கோ
ஊனம் ஓர் தடையில்லை
உனக்கோ
உள்ளமே ஓர் ஊனமானது

நண்பனே
நம்பிக்கையை அவரிடம்
பெற்றுக்கொள்
வாழ்க்கையை அவரிடம்
கற்றுக்கொள்

வாழ்ந்து பார்
உனக்கான ஓர் உலகம்
நிட்சயம் உண்டு

வாழ்ந்து பார்க்காமல்
மடிந்து விடாதே

வியாழன், 22 ஜனவரி, 2009

my kavithai 20 : ( 20 . ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

20.ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

பூக்களில் ஓர் பூ மட்டும்
மாலையாகிவிடாது

மரங்களில் ஓர் மரம் மட்டும்
தோப்பாகிடாது

எழுத்துக்களில் ஓர் எழுத்து மட்டும்
வார்த்தையாகிவிடாது

நூல்களில் ஓர் நூல் மட்டும்
நூலகமாகிவிடாது

கற்களில் ஓர் கல் மட்டும்
கட்டிடமாகிவிடாது

நீர்களில் ஓர் துளி மட்டும்
கடலாகிவிடாது

எல்லாம் சேர்ந்து இருந்தால் தான்
ஓர் கோர்வையாக உருமாறும் .

வாழ்க்கையும் இது போல தானே

மதத்தின் பெயரால்
ஜாதியின் பெயரால்
இனத்தின் பெயரால்
நாம் வேறுபட்டு இருந்தாலும்

மனம் என்ற ஒன்றில்
இணைந்தே இருப்போம்

மதம் என்பது
மனதை தெளிவுபடுத்ததானே அன்றி
மனதை காயப்படுத்த அல்ல

மதத்தின் பெயரால் பிரிவு வேண்டாம்
மனங்களால் நாம் ஒன்றாய்
இருப்போம்

நட்புடன் பழகுவோம்
என்றும் நட்புடன் மட்டும் இருப்போம்

புதன், 21 ஜனவரி, 2009

my kavithai 19 : ( 19. கவிதையாய் ஒரு கதை )

19.கவிதையாய் ஒரு கதை :

ஓர் நாள்
நானும்,என் நண்பனும்
நடைவீதியில் சென்று கொண்டு இருந்தோம்.

முதல் நாள்
அவன் பேசினான்.

நான் அழகிய மலர் ஒன்றை கண்டு எடுத்தேன்
இது போல்
என் வாழ்வில் இனி மலர் கிட்டுமா
தெரியவில்லை என்றான்

நான் ஒன்றும் சொல்ல வில்லை
வந்து விட்டேன்

மறு நாளும்
அவன் பேசினான்

நான் பல மலர்களை பெற்று இருக்கிறேன் என்றான்

நான் பதில் எதுவும் சொல்லாமல்
சென்று விட்டேன்.

இன்னுமொரு நாள்
நாங்கள் சந்தித்தோம்

நான் ஓர் மலர் தோட்டமே பெற்று இருக்கிறேன் என்றான்

நான் மௌனமாக சென்று விட்டேன்

பல நாட்களுக்கு பிறகு
நாங்கள் சந்தித்தோம்

அன்று
நான் பேசினேன்
அவன் மௌனமாக இருந்தான்
அவன் மௌனத்தை கலைத்து
உண்மையை அறிந்தேன்

மலர்கள் அதிகம் வேண்டும் என்பதற்காக
விஷ செடியையும் வளர்த்து விட்டேன்
அதனால் இன்று
நான் முதன் முதலாய்
நேசித்த என் அழகிய மலரும்
கருகி போய் விட்டது

இன்று நான் தனிமையில்
கண்களில் ஓரம் ஈரத்தோடு

உயிர் வாழ சுவாசம் முக்கியம் தான்
சுவாசம் வேண்டும் என்பதற்காக
எல்லா காற்றையும் சுவாசித்தால்
ஜீவன் இருக்காது

அது போல் தான் நல்ல நட்பும்

நட்பு வேண்டும் என்பதற்காக
எல்லோரையும் நண்பனாக சேர்த்தால்
முடிவில் உன் நல்ல நண்பர்களும் இல்லாமல்
சென்று விடுவார்கள்

my kavithai 18 : ( 18. தன்னம்பிக்கை )

18. தன்னம்பிக்கை :

வெற்றியை பறிப்பதற்கு
உன் கைகள் துணை இருந்தாலும்
அதனை தடுப்பதற்கு - இவ்வுலகில்
ஆயிரம் கைகள் காத்து கொண்டு
இருக்கின்றது

எத்தனை கைகள் தடுத்தாலும்
உன்
தன்னம்பிக்கை என்ற கை
உன்னில் இருக்கின்ற வரை
அத்தனையும் உன் காலடியில்
சமர்ப்பணம்

செவ்வாய், 20 ஜனவரி, 2009

my kavithai 17 : ( 17. காதலின் ஆழம் )

17 . காதலின் ஆழம் :

களவும் கற்று மற என்றார்கள்
காரணம் தெரியவில்லை

ஆனால்
காதலை சொல்லவில்லை
ஏனோ புரியவில்லை

நினைத்தவுடன் வருவதற்கும்
நினைத்தவுடன் மறப்பதற்கும்

காதல் ஒன்றும்
வாழ்க்கையின் வழி அல்ல
அது
வாழ்க்கையின் வலி.

வெற்றி பெற்றால் மட்டுமே காதல்
நினைக்க வேண்டும் என்றால்

அவன் காதலை அறியவில்லை
என்று தான் அர்த்தம்

தோல்வி அடைந்தால் காதலை
மறக்க வேண்டும்

என்று சொன்னால் உண்மையில்
அவன் காதலிக்கவில்லை
என்று தான் அர்த்தம் .

மனதின் ஓரமாய்
அந்த காதல் ஜனனத்தின்
முடிவு வரை
இருந்தால் தான்
அது உண்மையான காதல்
(காதலில் வெற்றியோ ,தோல்வியோ ,மனதின் ஓரமாய் அதை நினைத்திரு.).

my kavithai 16 : ( 16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) )

16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) :

வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை

காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை

நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை

நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை

பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை

நட்பு அழகானது தான்
காதல் வராத வரை

my kavithai 15 : ( 15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு )

15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு :

கடல் மீது ஒருவன்
தத்தளிக்கையில்
கரை மீது நின்று
உரையாடுகிறான்

கடல் மீது ஏனடா
விழுந்தாய் என்றான் ஒருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது எவ்வாறடா
விழுந்தாய் என்றான் இன்னொருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது விழுந்ததினால்
கண்ணீரினில்
விழுந்தான் இன்னுமொருவன் -
கரை மீது நின்று கொண்டு

பயனில்லா கேள்வியும்
பலனில்லா அழுகையும்
நீ கொடுத்தால்
அவன் கரை சேர்ந்து விடுவானா

எதை கொடுத்தால்
அவன் கரை சேர்வானோ
அதை செய்

அடுத்தவர் துன்பம் கண்டு
கண்ணீர் சிந்துபவனாக இருக்காதே
கண்ணீர் துடைப்பவனாக இரு

இதயத்திலோ வலி
கண்களோ கண்ணீர் சிந்துகின்றது
கைகளோ கண்ணீரை துடைக்கின்றது

கண்ணீர் சிந்தும்
கண்களாய் இருக்காதே
துடைத்து நிற்கும்
கைகளாய் இரு .

புதன், 14 ஜனவரி, 2009

my kavithai 14 : ( 14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ?)

14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ? :

இம்மண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
ஒவ்வோர் மைந்தனும்
கண்ணீர் சிந்துவானே - உனக்காக

அதுவில்லாமல்

ஓர் பொண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
கடைசி ஜீவனும் கூட
ஓர் துளி கண்ணீர் சிந்தலாகாது

தண்ணீரை நிலைநிறுத்த
அணைக்கட்டை கட்டினான்
உன்
கண்ணீரை நீ நிலை நிறுத்த
மனமென்பதை கட்டு

ரசிகன் என்று நீ இருக்கையில்
நடிகன் என்பவன்
நடித்துக்கொண்டே தான் இருப்பான்
சினிமாவில் மட்டுமல்ல
நிஜத்திலும் தான்

கடல் அலையை தூரத்தில்
நின்று ரசித்து செல்லலாம்
இல்லை
நான் கடலில் இறங்கியே
ரசிப்பேன் என்றால்
மூச்சடைத்து விடுவாய் நண்பனே

தொண்டன் என்று நீ இருக்கையில்
அரசியல் செய்பவன்
அடித்துக்கொண்டே தான் இருப்பான்
நாட்டை மட்டுமல்ல
உன் வீட்டையும் தான்

நீ தீக்குளித்து மேலே
செல்வாய்
அவன்
நீ குளிக்க மேலே
உயர்வான்

எதை விதைக்கிறாயோ
அதுவே
மரமாக வளரும்
விதைப்பதை தவறாக விதைத்து விட்டு
பலனை மட்டும் எதிர்பார்க்கிறாயே

மாண்டு போவதால்
உன் வாழ்க்கையை
மீட்டு விடுவாயா
வாழ்ந்து பார்
வாழ்க்கை புரியும்
நீயாக நீ இருக்கையில்
மாண்டே போ
உனக்காக பலர் இருக்கையில்
மாண்டும் மீண்டும் இருப்பாய்

செவ்வாய், 13 ஜனவரி, 2009

my kavithai 13 : ( 13. எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே)

13 . எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே :

காதலில் விழுந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்

வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்

ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்

நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்

உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.

திங்கள், 5 ஜனவரி, 2009

my kavithai 12 : ( 12. உன் வாழ்க்கை உன் கையில்)

12. உன் வாழ்க்கை உன் கையில் :

வாழ்க்கையில்
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவனாக
நீ இருந்தால்
-உன் வாழ்க்கை உன் கையில்

நம்பிக்கையை
எந்த நிமிடமும் கைவிடாமல்
நீ இருந்தால்
-உன் வாழ்க்கை உன் கையில்

தவறுகளில்
வாழ்க்கையை திருத்திகொள்பவனாக
நீ இருந்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

வெற்றிகள்
எல்லா நிமிடமும் இறைவனால் வருவது என
நீ நினைத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

நட்பினில்
நம்பிக்கை உள்ளவரை
தேர்ந்தெடுத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

காதலில்
விட்டுகொடுக்கும் மனம் உள்ளவரை
தேர்ந்தெடுத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில

உண்மையில்
உன்னை நீ
அறியாத வரை
உலகை நீ அறிய மாட்டாய்

உன்னை நீ
அறிந்து கொண்டால்
உலகம் நாளை
உன் கையில்

குறிப்பு :
உலகை மாற்ற நினைப்பதற்கு முன்
முதலில்
உன்னை நீ மாற்று