வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

வியாழன், 26 நவம்பர், 2009

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

மழை பெய்கின்ற வேளையிலே!
மனம் சுடுகின்ற வெயில்
நோக்கி செல்லுது

வெயில் சுடுகின்ற வேளையிலே!
மனம் நனைகின்ற மழை
நோக்கி செல்லுது

சுவை பிறக்கின்ற வேளையிலே!
மனம் கடுக்கின்ற காரம்
நோக்கி செல்லுது

காரம் கடுக்கின்ற வேளையிலே!
மனம் இனிக்கின்ற சுவை
நோக்கி செல்லுது

அளவுக்கு அதிகமானால்
அமிர்தமும் நஞ்சென
சொல் உண்மையன்றே!

மழை மீது நேசம் அதிகமானாலும்!
வெயில் மீது நேசம் அதிகமானாலும்!
உயிர் மீது நேசம் அதிகம்னானாலும்!

உடல் வலிமை இழப்பது நிஜமன்றோ!
உயிர் உடலை இழப்பது உண்மையன்றோ!

நேசம் எல்லா இடத்தும் வைத்திரு!
இருந்தும் எல்லை கடந்த
நேசம் கொஞ்சம் தவிர்த்திரு!.

பொருள் : நாம் எங்கே நேசம் அதிகம் கொள்கிறோமோ,அந்நொடியே நாம் பலவீனம் அடைகிறோம் என்பதே இதன் பொருள்.

புதன், 11 நவம்பர், 2009

1. ரத்ததானம் செய்திடுவேர் :

1. ரத்ததானம் செய்திடுவேர் : ( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )

வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நீயும் பிறந்தாய்
நண்பா
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நானும் பிறந்தேன்

ஓர் நிலையில் ஓர் புள்ளியில்
நானும்,நீயும் சந்தித்தோம்

சந்தித்த நொடியில் உனை பற்றி
சிந்திக்க மனம் செல்ல வில்லை

நாட்கள் நகர நகர
நம் நட்பும் ஆழமானது

எத்தனையோ விவாதங்கள்
நமக்குள் பிறந்தது

ஒன்றிலே நம் எண்ணங்கள்
ஒன்றாகும்
ஒன்றிலே நம் எண்ணங்கள்
வேறாகும்

விவாதங்கள் ஆயிரம் பிறந்தாலும்
எண்ணங்கள் மாறுபட்டு இருந்தாலும்

நம் நட்பென்றும் பிரியாமல்
நம்பிக்கையோடு நடை போட்டது

புத்தகம் படித்தால் தான்
ஞானம் பிறப்பதில்லை

மனித வாழ்வை படித்தாலே
ஞானம் பிறந்திடுமே

ஆம்!உன்னோடு நட்பு கொண்டதினால்
ஓர் உண்மை கண்டேனே

மனித ஓட்டம் ஓட
குருதிஇன்றி ஓர் அணுவும்
அசையாதே

எத்தனையோ பகல்கள்
குருதிக்காக நீ ஓடிய ஓட்டம்

எத்தனையோ இரவுகள்
குருதிக்காக நீ மறந்த தூக்கம்

மொத்தமாய் சுயநலமின்றி
செய்து நின்றாயே

என் எண்ணம் மொத்தமும்
உன்னோடு கலந்து நின்றது
அவ்விடம் தானே

எத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது
எத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது

வாழ்த்திய உள்ளங்களும்
வாழ்ந்த நெஞ்சங்களும்

ஒன்றாகி திரண்டு வந்தால்
நாம்
வசித்த பகுதி தான் திகையுமோ?.

பூமியில் பிறந்தவர் எல்லோரும்
பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்திடலாகாது

இருந்தும் நண்பா

இப்பூவுலகில் உன் பிறப்பிற்கு
நீ தான் அர்த்தம் கொடுத்து
நின்றாயே

படைத்தவனும் உனை கண்டு
பயந்து இருப்பானோ?

எங்கே நீயும் ஓர் நாள்
படைத்தவன் ஆகி விடுவாயோ
என நினைத்தோ

உன்னையும் தன்னோடு விண்ணில்
சேர்த்துக் கொண்டானோ

நண்பா நீ
விண்ணோடு கலந்தாலும்

மண்ணோடு "ரத்ததானம்" எனும்
விதையை விதைத்து

பலர் நெஞ்சில் இன்றும்
என்றும் எங்களோடு வாழ்கிறாயே

--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு :

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு : ( கவிதையாய் ஒரு பாடல் )

மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை

எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)