வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
நட்பு கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜனவரி, 2009

my kavithai 20 : ( 20 . ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

20.ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

பூக்களில் ஓர் பூ மட்டும்
மாலையாகிவிடாது

மரங்களில் ஓர் மரம் மட்டும்
தோப்பாகிடாது

எழுத்துக்களில் ஓர் எழுத்து மட்டும்
வார்த்தையாகிவிடாது

நூல்களில் ஓர் நூல் மட்டும்
நூலகமாகிவிடாது

கற்களில் ஓர் கல் மட்டும்
கட்டிடமாகிவிடாது

நீர்களில் ஓர் துளி மட்டும்
கடலாகிவிடாது

எல்லாம் சேர்ந்து இருந்தால் தான்
ஓர் கோர்வையாக உருமாறும் .

வாழ்க்கையும் இது போல தானே

மதத்தின் பெயரால்
ஜாதியின் பெயரால்
இனத்தின் பெயரால்
நாம் வேறுபட்டு இருந்தாலும்

மனம் என்ற ஒன்றில்
இணைந்தே இருப்போம்

மதம் என்பது
மனதை தெளிவுபடுத்ததானே அன்றி
மனதை காயப்படுத்த அல்ல

மதத்தின் பெயரால் பிரிவு வேண்டாம்
மனங்களால் நாம் ஒன்றாய்
இருப்போம்

நட்புடன் பழகுவோம்
என்றும் நட்புடன் மட்டும் இருப்போம்

புதன், 21 ஜனவரி, 2009

my kavithai 19 : ( 19. கவிதையாய் ஒரு கதை )

19.கவிதையாய் ஒரு கதை :

ஓர் நாள்
நானும்,என் நண்பனும்
நடைவீதியில் சென்று கொண்டு இருந்தோம்.

முதல் நாள்
அவன் பேசினான்.

நான் அழகிய மலர் ஒன்றை கண்டு எடுத்தேன்
இது போல்
என் வாழ்வில் இனி மலர் கிட்டுமா
தெரியவில்லை என்றான்

நான் ஒன்றும் சொல்ல வில்லை
வந்து விட்டேன்

மறு நாளும்
அவன் பேசினான்

நான் பல மலர்களை பெற்று இருக்கிறேன் என்றான்

நான் பதில் எதுவும் சொல்லாமல்
சென்று விட்டேன்.

இன்னுமொரு நாள்
நாங்கள் சந்தித்தோம்

நான் ஓர் மலர் தோட்டமே பெற்று இருக்கிறேன் என்றான்

நான் மௌனமாக சென்று விட்டேன்

பல நாட்களுக்கு பிறகு
நாங்கள் சந்தித்தோம்

அன்று
நான் பேசினேன்
அவன் மௌனமாக இருந்தான்
அவன் மௌனத்தை கலைத்து
உண்மையை அறிந்தேன்

மலர்கள் அதிகம் வேண்டும் என்பதற்காக
விஷ செடியையும் வளர்த்து விட்டேன்
அதனால் இன்று
நான் முதன் முதலாய்
நேசித்த என் அழகிய மலரும்
கருகி போய் விட்டது

இன்று நான் தனிமையில்
கண்களில் ஓரம் ஈரத்தோடு

உயிர் வாழ சுவாசம் முக்கியம் தான்
சுவாசம் வேண்டும் என்பதற்காக
எல்லா காற்றையும் சுவாசித்தால்
ஜீவன் இருக்காது

அது போல் தான் நல்ல நட்பும்

நட்பு வேண்டும் என்பதற்காக
எல்லோரையும் நண்பனாக சேர்த்தால்
முடிவில் உன் நல்ல நண்பர்களும் இல்லாமல்
சென்று விடுவார்கள்

செவ்வாய், 20 ஜனவரி, 2009

my kavithai 16 : ( 16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) )

16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) :

வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை

காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை

நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை

நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை

பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை

நட்பு அழகானது தான்
காதல் வராத வரை

ஞாயிறு, 16 நவம்பர், 2008

my kavithai 6 : ( 6. நட்பின் எல்லை)

6 . நட்பின் எல்லை :

நட்பு எனும் பூந்த்தோட்டத்தில் அழகான மலர்களை மட்டும்
வளர்க்கவும்
மலர்கள் வேண்டும் என்பதற்காக விஷ செடிகளை வளர்த்தால்
உன் அழகிய பூந்தோட்டமே அழிந்து விடும்.