வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
நம்பிக்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கவிதை 40 : நீயே உன்னை செதுக்கிடும் அழகிய சிற்பி :

கவிதை 40 : நீயே உன்னை செதுக்கிடும் அழகிய சிற்பி :

எத்திசையினும் நீ சென்றாலும்
எந்நாடிடும் நீ சென்றாலும்

பொருட்களின் அழகிய வடிவம்
பொருட்களை அழகாய் செதுக்குதலே

இக்கணமே மெய்களென நம்பினாலே
அக்கணமே பொய்களோடு கலந்திடுமே

நம் எண்ணம் பொய்களோடு
அந் நொடியில் கலந்திடுமே

சிற்பத்தின் உண்மை யாவும்
பாறையெனும் பொய்களால் சூழ்ந்து
பொய்களாவும் மெய்களாய் காட்சியளிக்குதே

இயற்கையின் ரகசியங்களும்
வாழ்வின் ரகசியங்களும்

இயற்கையை நேசிக்கையில்
அழகாய் தென்படுமே

வாழ்வின் விடைகளும்
அழகாய் கிடைத்திடுமே

பாறைக்குள் மறைந்திருக்கும்
அழகிய சிற்பமாய்
உனக்குள் மறைந்திருக்குமே

நீ தேடிடும் வெற்றியும்
நீ தேடிடும் நம்பிக்கையும்
நீ தேடிடும் சரித்திரமும்
உனக்குள் மறைந்திருக்குமே

பாறையை செதுக்கிடும் சிற்பியாய்
உன்னை செதுக்கிடும் ஒருவனாய்

ஓர் நாள் ஒருவன் வருகையில்

வெளியிலிருக்கும் பொய்கள் மறைந்து
உன்னிளிருக்கும் மெய்கள் மின்னிடுமே

நினைத்துப் பார்க்கையில்

புதிதாய் எதுவும் இங்கு வருவதில்லை
புதைந்து இருப்பதே இங்கு வருவதுண்டு

ஒவ்வொரு முறையும் புதிதாய்
சிற்பம் செதுக்க இருக்கையில்
சிற்பியை தேடி அலைந்திடாதே
நீயும் என்றும் தொலைந்திடாதே

பாறையை செதுக்கும் சிற்பியாய்
நீயே மாறிடு
சிற்பம் பேசிடும் திறனை
நீயே கொடுத்திடு

பொருள் : எந்த பாறையும் செதுக்குவதால் சிற்பம் பிறப்பதில்லை.ஒவ்வொரு சிற்பமும் நான்கு பாறையால் சூழ்ந்துள்ளது என்பதே மெய்.அது போலவே எல்லா மனிதர்களுக்குள்ளும் வெற்றியும்,நம்பிக்கையும் புதைந்தே உள்ளது.ஏதோ ஒரு விதத்தில் அது வெளி வராமல் உள்ளது.நம்மை ஊக்கிவிக்க ஒருவர் வருகையில் நம் திறமைகள் எல்லாம் அழகாய் வெளி வந்திடும்.ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவரை எதிர்பார்க்காமல் நாமே நம்மை செதுக்கும் சிற்பியாய் மாறி விட வேண்டும் என்பது இதன் பொருள்.வாழக்கை புதிராய் இருக்கும் வரை தான் வாழ்க்கை அழகு...

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

வெற்றி

இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்

"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது

வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு

தோல்வி

உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்

"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்

தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு

தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்

தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி

தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

My kavithai 27 (27 . நம்பிக்கை விதைகள் ) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

27 th Kavithai : நம்பிக்கை விதைகள் (1st page) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்

(வாழ்ந்திடலாம் ....)

உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ...)

தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே

தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே

தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு

(வாழ்ந்திடலாம் ...)

வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்

மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ....)

புதன், 21 ஜனவரி, 2009

my kavithai 18 : ( 18. தன்னம்பிக்கை )

18. தன்னம்பிக்கை :

வெற்றியை பறிப்பதற்கு
உன் கைகள் துணை இருந்தாலும்
அதனை தடுப்பதற்கு - இவ்வுலகில்
ஆயிரம் கைகள் காத்து கொண்டு
இருக்கின்றது

எத்தனை கைகள் தடுத்தாலும்
உன்
தன்னம்பிக்கை என்ற கை
உன்னில் இருக்கின்ற வரை
அத்தனையும் உன் காலடியில்
சமர்ப்பணம்

ஞாயிறு, 16 நவம்பர், 2008

my kavithai 5 : ( 5. நம்பிக்கை)

5 . நம்பிக்கை :

உணவில்லாமல் பல நாட்கள்
வாழ்ந்திடலாம்
நீரில்லாமல் சில நாட்கள்
வாழ்ந்திடலாம்
காற்றில்லாமல் சில நொடிகள்
வாழ்ந்திடலாம்
ஆனால்
நம்பிகைஇல்லாமல் ஒரு நொடி கூட
வாழ்ந்திடமுடியாது