வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
பொது கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 மே, 2010

கவிதை 49 : நானும் ஒரு தொழிலாளியே !

கவிதை 49 : நானும் ஒரு தொழிலாளியே !

தொழிலார் தினம்
கலந்து கொள்ள
வேண்டி

பரிவுடன் ஒரு விண்ணப்பம் !

சுற்றுப்புற சிர்கேடை
தடுக்க எண்ணினேன்

சுட்ட செங்கற்களை
தூக்கி எறிந்தேன்

குழந்தை தொழிலாளர்களை
ஒழிக்க எண்ணினேன்

சின்ன சிறுவர்களை
பணியமர்த்த மறுத்தேன்

சுமையாவும் நானே தூக்கினேன் !
தொழிலாளியாய் நானே ஆனேன் !

வடிவமைப்பு நானே வடித்தேன் !
பொறியாளனாய் நானே ஆனேன் !

பட்டப்படிப்பும் படிக்க வில்லை
பள்ளிக்கும் போனது இல்லை

என் வீடு தனை
சுயமாய் கட்டியதால்

நானும் இன்று ஓர்
தொழிலாளியே !

இப்படிக்கு
காகம்

------------நகைச்சுவையுடன் ஒரு சிந்தனை கவிதை

பொருள் : சுற்றுப்புறத்தை மாசு(காற்றில் மாசு) கலக்காமல் பாது காப்போம்...குழந்தை தொழிலாளர்களை எங்கும் ஒழிப்போம்...இது நகைச்சுவை கலந்த சிந்ததனை கவிதை....குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு முன் நடவடிக்கையாய் நாம் நம் நல்ல நண்பர்களோடு இணைந்து நம்மால் முடிந்த ஒரு சில குழந்தைகளின் கல்வி செலவை ஏற்போம்....நம் நட்பு ஒரு நல்ல விஷயத்துக்கு பயன்படட்டும்...அது தான் நல்ல நட்புக்கு சிறப்பு......

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கவிதை 48 : ஓ மனிதா!

கவிதை 48 : ஓ மனிதா!

ஓ மனிதா!

வானுக்கும் எல்லையில்லை
பூமிக்கும் எல்லையில்லை

எல்லையெனும் சொல்லுக்கே
எல்லையில்லாத போது

வெற்றிக்கு எல்லையென
எதை எண்ணி மகிழ்வாய்?.

நேற்றொருவர் வெற்றியொனை
கண்டார்.
இன்றொருவர் முறித்திடவே
நின்றார்.
நாளையொருவர் படைத்திடவே
நிற்பார்.

முறியடிக்கும் வரை
அதுவே
எல்கை என்பாய்.

முறியடித்த பின்பு
அதுவும்
எல்கை என்பாய்.

எல்கையெனும் கோடு
உன்னை சிறை போட்டிடும்
மாயை!

ஓடு! ஓடு!
பின்னொருவர் உன்னை
கடந்த வருகிறாரென
எண்ணி
ஓடி கொண்டே இரு.....

சனி, 24 ஏப்ரல், 2010

கவிதை 47. முகங்களுக்குள் எத்தனை முகங்கள் :

கவிதை 47. முகங்களுக்குள் எத்தனை முகங்கள் :

முகம் !

நீ ஜனனித்த வேளையிலே
நீ அழுகின்ற வேளையிலே

உன் முகம் அழுதிடவும்
பிறர் முகம் சிரித்திடவும்

விந்தையாய் சிந்திக்க
வைத்திடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

பிறர் துன்பத்தை
நீ சிரித்திடும் வேளையிலே
உன் முகத்தை
நீ காட்டிடும் வேளையிலே

உன் நிழல் முகங்கள் கிழிந்து
உன் நிஜ முகங்கள் பதிந்து

உண்மையை உலகுக்கு
காட்டிடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

உன் அக பயத்தினை வெளிக்கொனராது
உன் அக உணர்வினை புறந்தள்ளாது

உன் மனம் கோழையாய் இருந்திடினும்
பிறர் மனம் வீரனாய் நினைத்திடவே

உனை ஆக்கிட
செய்திடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

உன் துக்கத்தை வெளிக்காட்டிடும்
உன் இன்பத்தை வெளிக்காட்டிடும்

கடந்தவையும் காட்டிடும்
நடப்பவையும் காட்டிடும்

பொய்யான மானிரடத்தில்
பொய்கள் எப்போதும்
உண்டுமென சொல்லாமல்
காட்டிட செய்திடும் - ஓர்
ஆள் காட்டி....................

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கவிதை 44 : ஞானமும்,காதலும் ஒன்று தானோ? :

கவிதை 44 : ஞானமும்,காதலும் ஒன்று தானோ? :

ஞானம் பிறக்கையிலே
மனம்
தனிமை நாடி செல்லுது

காதல் பிறக்கையிலே
மனம்
அன்பை நாடி செல்லுது

ஞானமும்,காதலும் ஓர் நிலையில்
ஒன்று தானோ?

இன்பத்தை துறந்து
துன்பத்தை மறந்து

மனிதனென்பதை கடந்து
துறவியாகி புனிதனானான்
ஞானி!

ஆசைகளை குறைத்து
விட்டுகொடுத்து வாழ்ந்து

அன்பென்பதை கலந்து
காதலாகி அன்புடையவனானான்
காதல் யோகி!

காலங்கள் சிலவும் கடந்ததால்
காட்சிகள் பலவும் மாறியதால்

ஆன்மீகத்திலே போலியும்
பெருகிடுச்சி!
காதலிலே பொய்களும்
வளர்ந்திடுச்சு!

காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
இயற்கையின் சாட்சி
சூரியன் மாறுவதில்லை

சூரியன் சாட்சியாய்
உண்மை ஞானிகள் இன்றும்
சிலருண்டு
உண்மை காதல்கள் இன்றும்
சிலவுண்டு

உண்மை ஞானிகளின் அன்பு
பெருகட்டும்
உண்மை காதலின் ஆயுள்
வளரட்டும்..

பொருள் : இவ்வுலகில் இன்றும் சில உண்மையான ஞானிகள் வாழ்வதுண்டு.இவ்வுலகில் இன்றும் சில உண்மையான காதல்கள் வாழ்வதுண்டு.எல்லா ஞானிகளும் ஞானிகளல்ல.எல்லா காதல்களும் காதலல்ல.ஞானி என்பவர் சுக போகங்களை துறந்து ஏதுமில்லாமல் வாழ்பவர்.இங்கே சிலர் ஞானி என்று சொல்லி கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.இவர்கள் ஞானிகளா?.காதல் என்பது விட்டு கொடுத்து வாழ்வது,அன்பை எல்லோரிடத்தும் செலுத்துவது,எத்தனை எதிர்ப்பு வந்திடினும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறுவது.இங்கே எத்தனை காதல்கள் காதலாக உள்ளது?.சில நேரங்களில் ஞானமும்,காதலும் ஒன்று தானோ என்று என்ன தோன்றுகிறது.உண்மை ஞானம் அன்பை விதைக்கட்டும்.உண்மை காதல் அன்பை வளர்க்கட்டும்,அதன் ஆயுளும் கூடட்டும்..

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

கவிதை 41 : நீயும் பொம்மை! நானும் பொம்மை! நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை! :

கவிதை 41 : நீயும் பொம்மை! நானும் பொம்மை! நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை! : ( கவிதையாய் ஒரு பாடல் )
யாருக்கும் யாரும் இங்கே நண்பனில்லை
யாருக்கும் யாரும் இங்கே பகைவனில்லை
ஏட்டினில் எழுதி வைத்தான்
இறைவன் அன்றோ!
பொம்மையாய் நாமும் வந்தோம்
உலகில் இன்றோ!
( யாருக்கும் யாரும் ... )
பஞ்சபூதமும் அவனே படைத்தான்
ஐம்புலனும் அவனே கொடுத்தான்
ஆசை,கோபம் இரண்டுமிங்கே
ஆயுள் முழுதும் படைத்தானே!
ஜீவராசி அவனே படைத்தான்
ஜீவனதை அவனே கொடுத்தான்
இன்பம்,துன்பம் இரண்டுமிங்கே
வாழ்க்கை முழுதும் படைத்தானே!
மெய்கள் ஒன்று இருந்தாலே
பொய்கள் ஒன்று இங்குண்டு
உண்மையாவும் கண்டு கொள்ள
ஆறாம் அறிவை படைத்தானே!
( யாருக்கும் யாரும் ... )
ஜனனமென்ற தண்டனை கொடுத்தான்
மரணமென்ற விடுதலை வைத்தான்
புரியாத புதிர்களுக்கிங்கே விடைகள்
ஒன்றை வைத்தானே!
பொய்களென்ற சரீரம் கொடுத்தான்
மெய்களென்ற உயிரை வைத்தான்
பொய்களில்லா மெய்களுக்கிங்கே கேள்வி
ஒன்றை வைத்தானே!
நவத்துவாரம் உடலில் கொடுத்தான்
நாட்கள்தோறும் திறந்தே வைத்தான்
உடலிலிருக்கும் உயிர்களுக்கிங்கே பூட்டு
ஒன்று வைத்தானே!
பூட்டி அவனும் நின்றானே!
(யாருக்கும் யாரும் ... )

பொருள் : பஞ்சபூதம் என்பது யாதெனில் நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று.ஐம்புலன்கள் என்பது யாதெனில் மெய்(மெய்யாகிய உடல்),வாய்,கண்,மூக்கு,செவி.அத்தனையும் நாம் கண்டிராத நமக்கு மேல் உள்ள ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டது என்பது மெய்.ஆறாம் அறிவு என்பது மெய்,பொய் என்பதை கண்டறிவதற்க்காக படைக்கப்பட்டது.ஓரறிவில் இருந்து ஐந்தறிவு உள்ள ஜீவன்கள் உணர முடியாதது ஆறறிவு உள்ள ஜீவன் உணர்வது.ஜனம் என்பதை தண்டனையாக எடுத்து கொள்.அங்கே,மரணம் என்பது விடுதலையே.மரணம் கண்டு மனிதா பயப்படாதே.மரணம் என்பது ஒரு புரியாத புதிர்.ஆனாலும் அங்கே விடைகள் ஒன்று உண்டு.நம் சரீரம் என்பது பொய்யானது.அதனுள் இருக்கும் உயிராகிய ஆன்மாவே மெய்யானது.இதை புரிந்து கொள்வது கடினம்.அதனால் தான் அங்கே ஒரு கேள்வி வைத்தான்.நவத்துவாரம் என்பது யாதெனில் இரண்டு கண் துவாரம்,இரண்டு செவி துவாரம்,இரண்டு நாசி துவாரம்,ஒரு வாய் துவாரம்,ஒரு ஜல துவாரம்,ஒரு மல துவாரம்.நம் உடலில் இது அத்தனையும் திறந்தே வைத்தான்.நம் உடலில் இருக்கும் உயிர்கள் எந்த துவாரம் வழியாகவும் எப்போது வேண்டும் என்றாலும் வெளியே போகலாம்.
இருந்தும் ஏதோ ஒரு சக்திக்குக்கு கட்டுப்பட்டு உள்ளேயே உள்ளது.அதன் நேரம் வரும் போது அது ஏதோ ஒரு துவாரம் வழியே வெளியே செல்லும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கவிதை 40 : நீயே உன்னை செதுக்கிடும் அழகிய சிற்பி :

கவிதை 40 : நீயே உன்னை செதுக்கிடும் அழகிய சிற்பி :

எத்திசையினும் நீ சென்றாலும்
எந்நாடிடும் நீ சென்றாலும்

பொருட்களின் அழகிய வடிவம்
பொருட்களை அழகாய் செதுக்குதலே

இக்கணமே மெய்களென நம்பினாலே
அக்கணமே பொய்களோடு கலந்திடுமே

நம் எண்ணம் பொய்களோடு
அந் நொடியில் கலந்திடுமே

சிற்பத்தின் உண்மை யாவும்
பாறையெனும் பொய்களால் சூழ்ந்து
பொய்களாவும் மெய்களாய் காட்சியளிக்குதே

இயற்கையின் ரகசியங்களும்
வாழ்வின் ரகசியங்களும்

இயற்கையை நேசிக்கையில்
அழகாய் தென்படுமே

வாழ்வின் விடைகளும்
அழகாய் கிடைத்திடுமே

பாறைக்குள் மறைந்திருக்கும்
அழகிய சிற்பமாய்
உனக்குள் மறைந்திருக்குமே

நீ தேடிடும் வெற்றியும்
நீ தேடிடும் நம்பிக்கையும்
நீ தேடிடும் சரித்திரமும்
உனக்குள் மறைந்திருக்குமே

பாறையை செதுக்கிடும் சிற்பியாய்
உன்னை செதுக்கிடும் ஒருவனாய்

ஓர் நாள் ஒருவன் வருகையில்

வெளியிலிருக்கும் பொய்கள் மறைந்து
உன்னிளிருக்கும் மெய்கள் மின்னிடுமே

நினைத்துப் பார்க்கையில்

புதிதாய் எதுவும் இங்கு வருவதில்லை
புதைந்து இருப்பதே இங்கு வருவதுண்டு

ஒவ்வொரு முறையும் புதிதாய்
சிற்பம் செதுக்க இருக்கையில்
சிற்பியை தேடி அலைந்திடாதே
நீயும் என்றும் தொலைந்திடாதே

பாறையை செதுக்கும் சிற்பியாய்
நீயே மாறிடு
சிற்பம் பேசிடும் திறனை
நீயே கொடுத்திடு

பொருள் : எந்த பாறையும் செதுக்குவதால் சிற்பம் பிறப்பதில்லை.ஒவ்வொரு சிற்பமும் நான்கு பாறையால் சூழ்ந்துள்ளது என்பதே மெய்.அது போலவே எல்லா மனிதர்களுக்குள்ளும் வெற்றியும்,நம்பிக்கையும் புதைந்தே உள்ளது.ஏதோ ஒரு விதத்தில் அது வெளி வராமல் உள்ளது.நம்மை ஊக்கிவிக்க ஒருவர் வருகையில் நம் திறமைகள் எல்லாம் அழகாய் வெளி வந்திடும்.ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவரை எதிர்பார்க்காமல் நாமே நம்மை செதுக்கும் சிற்பியாய் மாறி விட வேண்டும் என்பது இதன் பொருள்.வாழக்கை புதிராய் இருக்கும் வரை தான் வாழ்க்கை அழகு...

புதன், 11 நவம்பர், 2009

1. ரத்ததானம் செய்திடுவேர் :

1. ரத்ததானம் செய்திடுவேர் : ( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )

வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நீயும் பிறந்தாய்
நண்பா
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நானும் பிறந்தேன்

ஓர் நிலையில் ஓர் புள்ளியில்
நானும்,நீயும் சந்தித்தோம்

சந்தித்த நொடியில் உனை பற்றி
சிந்திக்க மனம் செல்ல வில்லை

நாட்கள் நகர நகர
நம் நட்பும் ஆழமானது

எத்தனையோ விவாதங்கள்
நமக்குள் பிறந்தது

ஒன்றிலே நம் எண்ணங்கள்
ஒன்றாகும்
ஒன்றிலே நம் எண்ணங்கள்
வேறாகும்

விவாதங்கள் ஆயிரம் பிறந்தாலும்
எண்ணங்கள் மாறுபட்டு இருந்தாலும்

நம் நட்பென்றும் பிரியாமல்
நம்பிக்கையோடு நடை போட்டது

புத்தகம் படித்தால் தான்
ஞானம் பிறப்பதில்லை

மனித வாழ்வை படித்தாலே
ஞானம் பிறந்திடுமே

ஆம்!உன்னோடு நட்பு கொண்டதினால்
ஓர் உண்மை கண்டேனே

மனித ஓட்டம் ஓட
குருதிஇன்றி ஓர் அணுவும்
அசையாதே

எத்தனையோ பகல்கள்
குருதிக்காக நீ ஓடிய ஓட்டம்

எத்தனையோ இரவுகள்
குருதிக்காக நீ மறந்த தூக்கம்

மொத்தமாய் சுயநலமின்றி
செய்து நின்றாயே

என் எண்ணம் மொத்தமும்
உன்னோடு கலந்து நின்றது
அவ்விடம் தானே

எத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது
எத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது

வாழ்த்திய உள்ளங்களும்
வாழ்ந்த நெஞ்சங்களும்

ஒன்றாகி திரண்டு வந்தால்
நாம்
வசித்த பகுதி தான் திகையுமோ?.

பூமியில் பிறந்தவர் எல்லோரும்
பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்திடலாகாது

இருந்தும் நண்பா

இப்பூவுலகில் உன் பிறப்பிற்கு
நீ தான் அர்த்தம் கொடுத்து
நின்றாயே

படைத்தவனும் உனை கண்டு
பயந்து இருப்பானோ?

எங்கே நீயும் ஓர் நாள்
படைத்தவன் ஆகி விடுவாயோ
என நினைத்தோ

உன்னையும் தன்னோடு விண்ணில்
சேர்த்துக் கொண்டானோ

நண்பா நீ
விண்ணோடு கலந்தாலும்

மண்ணோடு "ரத்ததானம்" எனும்
விதையை விதைத்து

பலர் நெஞ்சில் இன்றும்
என்றும் எங்களோடு வாழ்கிறாயே

--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு :

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு : ( கவிதையாய் ஒரு பாடல் )

மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை

எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)

புதன், 21 அக்டோபர், 2009

கவிதை 35 . படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! :

35 . படைப்புகள் இருப்பது நிஜமெனில் படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! : ( கவிதையாய் ஒரு பாடல்)

யாரோ ஒருவன் ஆட்டி வைக்கிறான்
ஆட்டம் முடிந்ததும் உணர வைக்கிறான்
ஓர் புள்ளியில் தொடங்கி
ஓர் வட்டமடிக்கிறோம்
வட்டம் முடிவிலே வாழ்க்கை
அறிய வைக்கிறான்.

(யாரோ ஒருவன்....)

முதன் முதல் உலகை பார்த்ததும்
அடடா அவனே அழுகிறான்
அவன் அழுகை குரலை கேட்டதும்
மனிதன் இங்கே சிரிக்கிறான்

இறுதியில்
வாழ்வின் இறுதியில்
அவனே இங்கே சிரிக்கிறான்
அடடா மனிதன் அழுகிறான்

மாற்றமே!மனிதன் வாழ்க்கையே!
இதை புரிந்து நீ
வாழ்வில் உயரு நீ

(யாரோ ஒருவன்....)

உடலின் உள்ளே உயிருமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

விதையின் உள்ளே மரமுமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

இருந்தும் நாம்
கண்ணால் கண்டு கொள்கிறோம்
காட்சி கண்ட பின்
உணர்வை அறிந்து நிற்கிறோம்

உழைத்தால் உயர்வு புரியுமே
உணர்ந்தால் காட்சி தெரியுமே

படைப்புகள் இருப்பது நிஜமெனில்
படைத்தவன் இருப்பதும் நிஜமன்றோ?.
(யாரோ ஒருவன்....)

சனி, 17 அக்டோபர், 2009

கவிதை 34 . வரதட்சணை :

34. வரதட்சணை :

பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்கிறானே மனிதன்
இருந்தும் தன்
மெய்ப்பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்வது ஏனோ?

பெண் ஒன்று தேடும் இடத்திலே
பொன் ஒன்றும் அங்கே தேடுகிறான்

எங்கெங்கு ஆண்மகன்கள்
தந்தை சொல்லுக்கு மிரண்டு
தாய் சொல்லுக்கு மகிழ்ந்து
வரதட்சணை எனும் பண நோயை
இசைவுடன் ஏற்றுக் கொள்கிறானோ

அங்கணமே
பொருளற்ற உடலாகிறான்
சிந்தனையற்ற மனிதனாகிறான்

துன்பம் எது வந்திடினும்
இன்பம் எது வந்திடினும்

வாழ்வில் எந்நொடியும்
உன்னோடு ஓர் ஜீவன்
உன் துணையாகிய துணைவியே

ஆண்மைக்கு அழகு
பெண்மையை காப்பது
பொருளை காப்பதல்ல

பெண்ணை விலை பேசி
உன்னை விற்று விடாதே
ஆண்மகனே

பொருள் : சில் ஆண்மகன்கள் தந்தை சொல்லுக்கு பயந்து,தாய் சொல்லுக்கு மகிழ்ந்து வரதட்சணை என்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.இங்கே பொருளற்ற உடலாக அவன் மட்டுமல்ல அவன் பெற்றோரும் உண்டு.வயதில் பெரியவர்கள் எல்லோரும் இங்கே பெரியவர்கள் அல்ல.எண்ணங்களால் உயர்ந்தவர்கள் மட்டுமே இங்கே பெரியவர்கள்.வரதட்சணையை ஒழிப்போம்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கவிதை 33. ராணுவ வீரனே முதல் குடிமகன் :

33 . ராணுவ வீரனே முதல் குடிமகன் : (ஓர் ரயில் பயணத்தின் போது ராணுவ வீரர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்டதை இங்கே கவிதை வடிவில் கொடுத்து இருக்கிறேன்.இது ஒரு உண்மை பதிவு )

எட்டாத உயரமெல்லாம்
எட்டிச் சென்றாய்
குளிர் தொட்டாலும்
நீயே தான்
தொடர்ந்து சென்றாய்

மலை உனை தொட்டாலும்
வெயில் உனை சுட்டாலும்
உயிர் உனை விட்டாலும்

உன் எண்ணம் எல்லாம்
ஒன்றிலே வைத்தே சென்றாய்

இரக்கமில்லா எதிரிகள் ஒரு புறம்
உறக்கமில்லா இரவுகள் மறுபுறம்

குண்டு சப்தத்தின்
ஒலிகள் மட்டும்
அங்கே ஓயாது

ஓயாத சப்தத்தின் நடுவிலே
உயிர் நீத்தது
எதிரியின் உயிர் மட்டுமின்றி
உன்
தோழனின் உயிருமாகும்

இவ்வுண்மை காலங்களால்
சில நேரம் பல பேர்
அறிய முடியாதது
இருந்தும்
அது குற்றமில்லை

நாலு புறமும் எதிரிகள்
சூழ்கையில்
அதை வென்றிட

நாலுபுறமும் ராணுவம்
சூழ்கையில்

எந்தப் பக்கம் எதிரிகள்
எந்தப் பக்கம் ராணுவம்

ஏதுமறியாது தனியாய்
நீ முன்னேறுகையில்

சப்தமில்லா அந்நொடியில்
புதர் நடுவே
மெல்லிய உரசல்கள்
---அது மனித ஊட்டம்
---மனசை சலனப்படுத்துது

எதிரியென நினைத்து
சுட்டுப் பார்க்கையில்
உயிர் நீத்தது
எதிரியல்ல
உயிர் தோழன்
என்கையில்

அந்நிமிடம் நீ
துடிக்கும் துடிப்புகள்
யார் அறிவார் தோழா?.

இருந்தும் முன்னேறுவாய்
எதிரிகளை பந்தாடுவாய்

உன் போல்
சுயநலமில்லா நாட்டுப்பற்று
வேறு எங்கு காண?

யார் யாரோ நாட்டின்
முதல் குடிமகன் என்கிறார்கள்
என்னை கேட்டால்
தோழா
நீயே பாரத நாட்டின்
முதல் குடிமகன்
நீயே இந்நாட்டின்
சுயநலமில்லா பாதுகாவலன்

வாழ்க உன் புகழ்
வளர்க உன் குலம்

ஜெய் ஹிந்த் .....

வெள்ளி, 2 அக்டோபர், 2009

கவிதை 32.தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

கவிதை 32 .தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை

எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே

இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்

வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.

வியாழன், 1 அக்டோபர், 2009

கவிதை 31 . உணர்வுகள் தான் மனிதனே :

31 . உணர்வுகள் தான் மனிதனே :

வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல

வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே பெண்ணுமல்ல

முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்

பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்

வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல

அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே ஆணுமல்ல

முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்

பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்

வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல

சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்

இங்கே மனிதனுமல்ல

முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்

பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.




பொருள் ::::::

தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கவிதை 30 : (30 . எனக்கான முதல் கவிதையும் இது தானோ? ) :

கவிதை 30 : எனக்கான முதல் கவிதையும் இது தானோ?:

என் கவிதையின் முதல் பயணம்
எங்கே உதயமானது?
இன்றளவும் எனக்கு தெரிய வில்லை

என் வாழ்க்கைப் பதிவில்
காயங்கள் நெஞ்சில் பதிய பதிய
வாழ்க்கை கொஞ்சம் புரிய புரிய

என்னை அறியாமலே
என் எண்ணங்கள் செதுக்கப்பட்டு
அவை எழுத்துக்களில் ஈட்டப்பட்டு

கவிதையென்பதில் முதல் அடியை
எடுத்திடவே காரணமானதே

நீரெல்லாம் சேர்ந்து
கடலாய் இருக்கையில்
அதிலே
மீன் அழுதால்
யாருக்கும் தெரிவதுமில்லை

எனது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து
கவிதையாய் இருக்கையில்
அதிலே
என் சோகமும்
யாருக்கும் புரிவதுமில்லை

இருந்தும்

துக்கத்தின் ஒரு பகுதியை
எனது எழுத்துக்களால்
என் காயத்தை துடைத்திடவே
பார்க்கிறேன்

துக்கத்தின் மறு பகுதியை
எனது எழுத்துக்களால்
பிறர் கண்ணீரை தடுத்திடவே
பார்க்கிறேன்

காயங்களிலான வாழ்க்கை
யாருக்கும் வேண்டாம்
நான் நினைக்க வில்லை

இன்பங்கள் போன்று
துன்பங்கள் வந்திடினும்
அவையெல்லாம்
எதிர்கொள்ளும் பக்குவங்கள்
இருந்திடவே நினைக்கிறேன்

துன்பமில்லாமல் இன்பமுட்டும்
வேண்டுமெனில்
மனித பிறப்பும் தேவை தானோ?

என் எழுத்துக்கள் கவிதையாகுதே
இதையெண்ணி
மகிழ்ச்சி கொள்வதா?
இல்லை
என் சோகங்கள் எழுத்துக்கள் ஆகுதே
இதையெண்ணி
வருத்தம் கொள்வதா?.

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பது கவிதைகள்
எவ்வாறோ என்னால்
படைக்கப்பட்டு விட்டது

நான் கவிஞனில்லை
இருந்தும்
எப்படி படைத்தேன்
இதுவரை
எனக்கும் புரிய வில்லை

எத்தனையோ கவிதைகள்
யார் யாருக்காவோ படைத்தேன்
எனக்காக - நான்
படைத்த "முதல் கவிதை"
இது தானே.

கவிதை 29. (மனமென்ன மனமென்ன சொல்லு) ::::

29.மனமென்ன மனமென்ன சொல்லு ::::

மனமென்ன மனமென்ன சொல்லு
உன்
மனசாட்சி படி நீயும் சொல்லு

மனசாட்சி இல்லேனு சொன்னால்
உன்
மனதினை மனதினை கொல்லு

உதவும் எண்ணங்கள் இருந்தால்
மனசாட்சி உனக்குள்ளும் உண்டு
உதவும் எண்ணங்கள் தொலைத்தால்
மனசாட்சி மண்ணுக்குள் உண்டு

பார்வையை நீ கொஞ்சம் தொலைத்தால்
மனதினை நீ கொஞ்சம் தொலைத்தால்
நண்பா
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
நீயும்
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்

உயிரினை நேசிக்க மறந்தால்
நீயும் ஆத்தீகன் என்பவன் இல்லை
நண்பா
நீயும் நாத்தீகன் என்பவன் இல்லை

மனிதனை மனிதனை நேசி
அது உன்னாலே முடியாமல் போனால்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

வெற்றி

இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்

"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது

வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு

தோல்வி

உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்

"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்

தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு

தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்

தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி

தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

My kavithai 27 (27 . நம்பிக்கை விதைகள் ) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

27 th Kavithai : நம்பிக்கை விதைகள் (1st page) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்

(வாழ்ந்திடலாம் ....)

உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ...)

தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே

தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே

தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு

(வாழ்ந்திடலாம் ...)

வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்

மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ....)

திங்கள், 20 ஜூலை, 2009

My kavithai 26 ( 26 . சரீரத்தின் உண்மை ) :

26: சரீரத்தின் உண்மை :

கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை

கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.

கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்

குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே

ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே

அங்ஙனமே

ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே

குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே

தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை

எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு

உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்

திங்கள், 13 ஜூலை, 2009

My kavithai 25 . (25 : இதயமதில் என் பார்வை ) :

25 . இதயமதில் என் பார்வை :

விழியிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் விழியின் ஓர் பார்வையிலே
"நற்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"நற்செயல் தனை செய்திடு"

மறு விழியின் மறு பார்வையிலே
"தீஞ்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"தீஞ்செயல் தனை விட்டுடு"

கையிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் கையின் ஓர் பார்வையிலே
"உனை முழுதும் காத்திடு"
மறு கையின் மறு பார்வையிலே
"பிறர் தனை தூக்கிடு"

காலிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் காலின் ஓர் பார்வையிலே
"நல்லதை எட்டி முன்னேறு"
மறு காலின் மறு பார்வையிலே
"தீயதை எட்டி உதைத்திடு"

எல்லாம் இரு வழிப் பாதையாக
இருந்தும்
இதயமது ஓர் வழிப் பாதையாக
ஆனதேனோ?

இதயமதில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஜீவன் பிறப்பதும் ஓர் முறை தான்
ஜென்மம் சாய்வதும் ஓர் முறை தான்
காதல் உதிப்பதும் ஓர் இடம் தான்
காதல் மறைவதும் அவ் விடம் தான்

காதலது எண்ணிக்கை கூடினால்
அது காதலுமல்ல
நட்பது உறவும் மாறினால்
அது நட்புமல்ல

காதல் ஓர் பெண்ணோடே
பிறக்க வேண்டும்
காதல் அப் பெண்ணோடே
முடிய வேண்டும்

நட்பு அது நட்பாகவே
பிறக்க வேண்டும்
நட்பு அது நட்பாகவே
முடிய வேண்டும்

எண்ணிக்கை கூடினாலும்
உறவுகள் மாறினாலும்
அது நேசம் அல்ல
அது சுயநலத்தின் அடையாளமே

இதயம் ஓர் வழிப்பாதையே
நன்மை மட்டுமே நிலைத்திடும் - இங்கே

திங்கள், 1 ஜூன், 2009

My kavithai 24 : ( 24 . நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர் )

24.நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர்

ஜனனத்தின் வருகையும் அறியாது
இனிவொரு
ஜென்மம் உண்டெனவும் தெரியாது

படைத்தவன் அன்றி
யார் அறிவார்?.

மண்ணில் பிறந்த
யாவருக்கும்
மகத்தான வரம் உண்டென
அறியலாகாது

ஜீவனை உயிர்ப்பிக்கின்ற திறன்
கடவுள் என்போம்
ஆம்
நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்.

கண் தானம் செய்கையில்
காட்சிப்பொருளாய்
நீயே அவனுக்கு கடவுளாகிறாய்