வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
நல்ல கருத்து கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல கருத்து கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 மே, 2010

கவிதை 49 : நானும் ஒரு தொழிலாளியே !

கவிதை 49 : நானும் ஒரு தொழிலாளியே !

தொழிலார் தினம்
கலந்து கொள்ள
வேண்டி

பரிவுடன் ஒரு விண்ணப்பம் !

சுற்றுப்புற சிர்கேடை
தடுக்க எண்ணினேன்

சுட்ட செங்கற்களை
தூக்கி எறிந்தேன்

குழந்தை தொழிலாளர்களை
ஒழிக்க எண்ணினேன்

சின்ன சிறுவர்களை
பணியமர்த்த மறுத்தேன்

சுமையாவும் நானே தூக்கினேன் !
தொழிலாளியாய் நானே ஆனேன் !

வடிவமைப்பு நானே வடித்தேன் !
பொறியாளனாய் நானே ஆனேன் !

பட்டப்படிப்பும் படிக்க வில்லை
பள்ளிக்கும் போனது இல்லை

என் வீடு தனை
சுயமாய் கட்டியதால்

நானும் இன்று ஓர்
தொழிலாளியே !

இப்படிக்கு
காகம்

------------நகைச்சுவையுடன் ஒரு சிந்தனை கவிதை

பொருள் : சுற்றுப்புறத்தை மாசு(காற்றில் மாசு) கலக்காமல் பாது காப்போம்...குழந்தை தொழிலாளர்களை எங்கும் ஒழிப்போம்...இது நகைச்சுவை கலந்த சிந்ததனை கவிதை....குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு முன் நடவடிக்கையாய் நாம் நம் நல்ல நண்பர்களோடு இணைந்து நம்மால் முடிந்த ஒரு சில குழந்தைகளின் கல்வி செலவை ஏற்போம்....நம் நட்பு ஒரு நல்ல விஷயத்துக்கு பயன்படட்டும்...அது தான் நல்ல நட்புக்கு சிறப்பு......

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கவிதை 48 : ஓ மனிதா!

கவிதை 48 : ஓ மனிதா!

ஓ மனிதா!

வானுக்கும் எல்லையில்லை
பூமிக்கும் எல்லையில்லை

எல்லையெனும் சொல்லுக்கே
எல்லையில்லாத போது

வெற்றிக்கு எல்லையென
எதை எண்ணி மகிழ்வாய்?.

நேற்றொருவர் வெற்றியொனை
கண்டார்.
இன்றொருவர் முறித்திடவே
நின்றார்.
நாளையொருவர் படைத்திடவே
நிற்பார்.

முறியடிக்கும் வரை
அதுவே
எல்கை என்பாய்.

முறியடித்த பின்பு
அதுவும்
எல்கை என்பாய்.

எல்கையெனும் கோடு
உன்னை சிறை போட்டிடும்
மாயை!

ஓடு! ஓடு!
பின்னொருவர் உன்னை
கடந்த வருகிறாரென
எண்ணி
ஓடி கொண்டே இரு.....

சனி, 24 ஏப்ரல், 2010

கவிதை 47. முகங்களுக்குள் எத்தனை முகங்கள் :

கவிதை 47. முகங்களுக்குள் எத்தனை முகங்கள் :

முகம் !

நீ ஜனனித்த வேளையிலே
நீ அழுகின்ற வேளையிலே

உன் முகம் அழுதிடவும்
பிறர் முகம் சிரித்திடவும்

விந்தையாய் சிந்திக்க
வைத்திடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

பிறர் துன்பத்தை
நீ சிரித்திடும் வேளையிலே
உன் முகத்தை
நீ காட்டிடும் வேளையிலே

உன் நிழல் முகங்கள் கிழிந்து
உன் நிஜ முகங்கள் பதிந்து

உண்மையை உலகுக்கு
காட்டிடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

உன் அக பயத்தினை வெளிக்கொனராது
உன் அக உணர்வினை புறந்தள்ளாது

உன் மனம் கோழையாய் இருந்திடினும்
பிறர் மனம் வீரனாய் நினைத்திடவே

உனை ஆக்கிட
செய்திடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

உன் துக்கத்தை வெளிக்காட்டிடும்
உன் இன்பத்தை வெளிக்காட்டிடும்

கடந்தவையும் காட்டிடும்
நடப்பவையும் காட்டிடும்

பொய்யான மானிரடத்தில்
பொய்கள் எப்போதும்
உண்டுமென சொல்லாமல்
காட்டிட செய்திடும் - ஓர்
ஆள் காட்டி....................

திங்கள், 19 ஏப்ரல், 2010

கவிதை 46 : நீயாகி ஏன் நானானேன்? :

கவிதை 46 : நீயாகி ஏன் நானானேன்? :

உன் எண்ணமே
என் எண்ணமாய்

உன் செய்கையே
என் செய்கையாய்

இவ்வுலகில்

நான் மட்டும்
உனை போல
ஏன் ஆனேனோ?

உன் பிழைகளே
என் பிழைகளாய்

உன் தவறுகளே
என் தவறுகளாய்

நான் எண்ணாமல்
எனக்குள் புகுந்தது
ஏனோ?

இங்கு நீ யாரோ ?
இங்கு நான் யாரோ ?

உன் கருவில் நானாகி
வந்ததினால்
நீயே என் தாயானாய்

உன் உயிரில் கருவாகி
வந்ததினால்
நானே உன் சேயானேன்

பொருள் : கருவுற்று இருக்கும் பெண்கள்,அந்த காலங்களில் என்ன நினைக்கிறார்களோ,என்ன செய்கிறார்களோ அதுவே பல நேரம் அந்த சிசுவுக்கும் சென்றைடையும்....இந்நேரங்களில் பெண்கள் நல்லதை செய்தால் நல்லது,நல்லதை நினைத்தால் நல்லது...பெண்களுக்கு மட்டுமல்ல உங்கள் சிசுவுக்கும்.....உங்களால் ஏதுமறியா சிசுவும் எண்ணம் மாறி விட கூடாது......

வியாழன், 26 நவம்பர், 2009

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

மழை பெய்கின்ற வேளையிலே!
மனம் சுடுகின்ற வெயில்
நோக்கி செல்லுது

வெயில் சுடுகின்ற வேளையிலே!
மனம் நனைகின்ற மழை
நோக்கி செல்லுது

சுவை பிறக்கின்ற வேளையிலே!
மனம் கடுக்கின்ற காரம்
நோக்கி செல்லுது

காரம் கடுக்கின்ற வேளையிலே!
மனம் இனிக்கின்ற சுவை
நோக்கி செல்லுது

அளவுக்கு அதிகமானால்
அமிர்தமும் நஞ்சென
சொல் உண்மையன்றே!

மழை மீது நேசம் அதிகமானாலும்!
வெயில் மீது நேசம் அதிகமானாலும்!
உயிர் மீது நேசம் அதிகம்னானாலும்!

உடல் வலிமை இழப்பது நிஜமன்றோ!
உயிர் உடலை இழப்பது உண்மையன்றோ!

நேசம் எல்லா இடத்தும் வைத்திரு!
இருந்தும் எல்லை கடந்த
நேசம் கொஞ்சம் தவிர்த்திரு!.

பொருள் : நாம் எங்கே நேசம் அதிகம் கொள்கிறோமோ,அந்நொடியே நாம் பலவீனம் அடைகிறோம் என்பதே இதன் பொருள்.

புதன், 11 நவம்பர், 2009

1. ரத்ததானம் செய்திடுவேர் :

1. ரத்ததானம் செய்திடுவேர் : ( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )

வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நீயும் பிறந்தாய்
நண்பா
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நானும் பிறந்தேன்

ஓர் நிலையில் ஓர் புள்ளியில்
நானும்,நீயும் சந்தித்தோம்

சந்தித்த நொடியில் உனை பற்றி
சிந்திக்க மனம் செல்ல வில்லை

நாட்கள் நகர நகர
நம் நட்பும் ஆழமானது

எத்தனையோ விவாதங்கள்
நமக்குள் பிறந்தது

ஒன்றிலே நம் எண்ணங்கள்
ஒன்றாகும்
ஒன்றிலே நம் எண்ணங்கள்
வேறாகும்

விவாதங்கள் ஆயிரம் பிறந்தாலும்
எண்ணங்கள் மாறுபட்டு இருந்தாலும்

நம் நட்பென்றும் பிரியாமல்
நம்பிக்கையோடு நடை போட்டது

புத்தகம் படித்தால் தான்
ஞானம் பிறப்பதில்லை

மனித வாழ்வை படித்தாலே
ஞானம் பிறந்திடுமே

ஆம்!உன்னோடு நட்பு கொண்டதினால்
ஓர் உண்மை கண்டேனே

மனித ஓட்டம் ஓட
குருதிஇன்றி ஓர் அணுவும்
அசையாதே

எத்தனையோ பகல்கள்
குருதிக்காக நீ ஓடிய ஓட்டம்

எத்தனையோ இரவுகள்
குருதிக்காக நீ மறந்த தூக்கம்

மொத்தமாய் சுயநலமின்றி
செய்து நின்றாயே

என் எண்ணம் மொத்தமும்
உன்னோடு கலந்து நின்றது
அவ்விடம் தானே

எத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது
எத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது

வாழ்த்திய உள்ளங்களும்
வாழ்ந்த நெஞ்சங்களும்

ஒன்றாகி திரண்டு வந்தால்
நாம்
வசித்த பகுதி தான் திகையுமோ?.

பூமியில் பிறந்தவர் எல்லோரும்
பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்திடலாகாது

இருந்தும் நண்பா

இப்பூவுலகில் உன் பிறப்பிற்கு
நீ தான் அர்த்தம் கொடுத்து
நின்றாயே

படைத்தவனும் உனை கண்டு
பயந்து இருப்பானோ?

எங்கே நீயும் ஓர் நாள்
படைத்தவன் ஆகி விடுவாயோ
என நினைத்தோ

உன்னையும் தன்னோடு விண்ணில்
சேர்த்துக் கொண்டானோ

நண்பா நீ
விண்ணோடு கலந்தாலும்

மண்ணோடு "ரத்ததானம்" எனும்
விதையை விதைத்து

பலர் நெஞ்சில் இன்றும்
என்றும் எங்களோடு வாழ்கிறாயே

--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு :

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு : ( கவிதையாய் ஒரு பாடல் )

மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை

எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)

சனி, 17 அக்டோபர், 2009

கவிதை 34 . வரதட்சணை :

34. வரதட்சணை :

பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்கிறானே மனிதன்
இருந்தும் தன்
மெய்ப்பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்வது ஏனோ?

பெண் ஒன்று தேடும் இடத்திலே
பொன் ஒன்றும் அங்கே தேடுகிறான்

எங்கெங்கு ஆண்மகன்கள்
தந்தை சொல்லுக்கு மிரண்டு
தாய் சொல்லுக்கு மகிழ்ந்து
வரதட்சணை எனும் பண நோயை
இசைவுடன் ஏற்றுக் கொள்கிறானோ

அங்கணமே
பொருளற்ற உடலாகிறான்
சிந்தனையற்ற மனிதனாகிறான்

துன்பம் எது வந்திடினும்
இன்பம் எது வந்திடினும்

வாழ்வில் எந்நொடியும்
உன்னோடு ஓர் ஜீவன்
உன் துணையாகிய துணைவியே

ஆண்மைக்கு அழகு
பெண்மையை காப்பது
பொருளை காப்பதல்ல

பெண்ணை விலை பேசி
உன்னை விற்று விடாதே
ஆண்மகனே

பொருள் : சில் ஆண்மகன்கள் தந்தை சொல்லுக்கு பயந்து,தாய் சொல்லுக்கு மகிழ்ந்து வரதட்சணை என்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.இங்கே பொருளற்ற உடலாக அவன் மட்டுமல்ல அவன் பெற்றோரும் உண்டு.வயதில் பெரியவர்கள் எல்லோரும் இங்கே பெரியவர்கள் அல்ல.எண்ணங்களால் உயர்ந்தவர்கள் மட்டுமே இங்கே பெரியவர்கள்.வரதட்சணையை ஒழிப்போம்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வியாழன், 1 அக்டோபர், 2009

கவிதை 31 . உணர்வுகள் தான் மனிதனே :

31 . உணர்வுகள் தான் மனிதனே :

வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல

வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே பெண்ணுமல்ல

முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்

பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்

வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல

அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே ஆணுமல்ல

முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்

பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்

வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல

சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்

இங்கே மனிதனுமல்ல

முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்

பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.




பொருள் ::::::

தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கவிதை 29. (மனமென்ன மனமென்ன சொல்லு) ::::

29.மனமென்ன மனமென்ன சொல்லு ::::

மனமென்ன மனமென்ன சொல்லு
உன்
மனசாட்சி படி நீயும் சொல்லு

மனசாட்சி இல்லேனு சொன்னால்
உன்
மனதினை மனதினை கொல்லு

உதவும் எண்ணங்கள் இருந்தால்
மனசாட்சி உனக்குள்ளும் உண்டு
உதவும் எண்ணங்கள் தொலைத்தால்
மனசாட்சி மண்ணுக்குள் உண்டு

பார்வையை நீ கொஞ்சம் தொலைத்தால்
மனதினை நீ கொஞ்சம் தொலைத்தால்
நண்பா
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
நீயும்
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்

உயிரினை நேசிக்க மறந்தால்
நீயும் ஆத்தீகன் என்பவன் இல்லை
நண்பா
நீயும் நாத்தீகன் என்பவன் இல்லை

மனிதனை மனிதனை நேசி
அது உன்னாலே முடியாமல் போனால்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

வெற்றி

இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்

"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது

வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு

தோல்வி

உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்

"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்

தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு

தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்

தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி

தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......

திங்கள், 20 ஜூலை, 2009

My kavithai 26 ( 26 . சரீரத்தின் உண்மை ) :

26: சரீரத்தின் உண்மை :

கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை

கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.

கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்

குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே

ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே

அங்ஙனமே

ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே

குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே

தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை

எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு

உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்

திங்கள், 13 ஜூலை, 2009

My kavithai 25 . (25 : இதயமதில் என் பார்வை ) :

25 . இதயமதில் என் பார்வை :

விழியிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் விழியின் ஓர் பார்வையிலே
"நற்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"நற்செயல் தனை செய்திடு"

மறு விழியின் மறு பார்வையிலே
"தீஞ்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"தீஞ்செயல் தனை விட்டுடு"

கையிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் கையின் ஓர் பார்வையிலே
"உனை முழுதும் காத்திடு"
மறு கையின் மறு பார்வையிலே
"பிறர் தனை தூக்கிடு"

காலிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் காலின் ஓர் பார்வையிலே
"நல்லதை எட்டி முன்னேறு"
மறு காலின் மறு பார்வையிலே
"தீயதை எட்டி உதைத்திடு"

எல்லாம் இரு வழிப் பாதையாக
இருந்தும்
இதயமது ஓர் வழிப் பாதையாக
ஆனதேனோ?

இதயமதில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஜீவன் பிறப்பதும் ஓர் முறை தான்
ஜென்மம் சாய்வதும் ஓர் முறை தான்
காதல் உதிப்பதும் ஓர் இடம் தான்
காதல் மறைவதும் அவ் விடம் தான்

காதலது எண்ணிக்கை கூடினால்
அது காதலுமல்ல
நட்பது உறவும் மாறினால்
அது நட்புமல்ல

காதல் ஓர் பெண்ணோடே
பிறக்க வேண்டும்
காதல் அப் பெண்ணோடே
முடிய வேண்டும்

நட்பு அது நட்பாகவே
பிறக்க வேண்டும்
நட்பு அது நட்பாகவே
முடிய வேண்டும்

எண்ணிக்கை கூடினாலும்
உறவுகள் மாறினாலும்
அது நேசம் அல்ல
அது சுயநலத்தின் அடையாளமே

இதயம் ஓர் வழிப்பாதையே
நன்மை மட்டுமே நிலைத்திடும் - இங்கே

திங்கள், 1 ஜூன், 2009

My kavithai 24 : ( 24 . நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர் )

24.நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர்

ஜனனத்தின் வருகையும் அறியாது
இனிவொரு
ஜென்மம் உண்டெனவும் தெரியாது

படைத்தவன் அன்றி
யார் அறிவார்?.

மண்ணில் பிறந்த
யாவருக்கும்
மகத்தான வரம் உண்டென
அறியலாகாது

ஜீவனை உயிர்ப்பிக்கின்ற திறன்
கடவுள் என்போம்
ஆம்
நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்.

கண் தானம் செய்கையில்
காட்சிப்பொருளாய்
நீயே அவனுக்கு கடவுளாகிறாய்

ஞாயிறு, 10 மே, 2009

my kavithai 22 : (22. ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம் )

22.ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

அர்த்தமுள்ளதும் ஓர் நொடியில் தான்
ஆயிரமுள்ளதும் ஓர் நொடியில் தான்
அச்சம் வருவதும் ஓர் நொடியில் தான்
அகண்டு நிற்பதும் ஓர் நொடியில் தான்

(ஓர் நொடி போதும் )

மண் ஆசையில் மாண்டு போவதும்
ஓர் நொடியில் தான்

பெண் ஆசையில் பித்தன் ஆவதும்
ஓர் நொடியில் தான்

இதயம் தொலைத்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

நினைவை இழந்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

வார்த்தை தவறி விழுவதும்
ஓர் நொடியில் தான்

வாழ்க்கை மாறி விடுவதும்
ஓர் நொடியில் தான்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

(ஓர் நொடி போதும் )

நட்பினில் யாவரும் வருவதற்க்கு
ஓர் நொடி போதும்

நட்பினில் சிறந்தவன் கிடைப்பதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

நாத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் நொடி போதும்

ஆத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் யுகம் வேண்டும்

காதலில் விழுவதற்கு
ஓர் நொடி போதும்

விழுந்தால் எழுவதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

தவறு செய்திட
ஓர் நொடி போதும்

வாழ்க்கை மாறிட
ஓர் யுகம் வேண்டும்

யுத்தம் பிறந்திட
ஓர் நொடி போதும்

அமைதி திறிம்பிட
ஓர் யுகம் வேண்டும்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

புதன், 28 ஜனவரி, 2009

my kavithai 21 : ( 21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ? )

21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ?

(உடலில் உள்ள குறை எல்லாம் ஊனம் இல்லை,உள்ளம் குறையானால் அது தான் ஊனம் ( அவரும் மனிதர் தான்,நேசிப்போம் அந்த ஜீவனையும் தான்.நண்பர் ஒருவருக்காக படைக்க பட்டது - அவருக்கே சமர்பனம் இது ) ) :

விடையறியா உலகத்தில்
வினாக்களின் கூட்டத்தில்
ஓர் ஜீவனாய்
நாமும் பயணிக்கின்றோம்

விடையறியும் முன்னே
இறங்க நினைக்கையில்
பாதையும் வேறாகி
பயணமும் முடிகிறது

வினாக்களே பிறக்க
வில்லையெனில்
பயணமும் எதற்கோ ?

பாதியில் இறங்கத்தான்
உன் பயணமென்றால்
நீ
பயனியானது ஏனோ?

கண் இருந்தும் பார்வையில்லை
மொழி தெரிந்தும் பேசவில்லை
நடை அறிந்தும் நடக்கவில்லை

வினாக்கள் எத்தனை பிறந்தாலும்
விடையறிய ஓர் ஜீவனாய்
அவனும் பயணிக்கிறான்

அவனுக்கோ
ஊனம் ஓர் தடையில்லை
உனக்கோ
உள்ளமே ஓர் ஊனமானது

நண்பனே
நம்பிக்கையை அவரிடம்
பெற்றுக்கொள்
வாழ்க்கையை அவரிடம்
கற்றுக்கொள்

வாழ்ந்து பார்
உனக்கான ஓர் உலகம்
நிட்சயம் உண்டு

வாழ்ந்து பார்க்காமல்
மடிந்து விடாதே

புதன், 21 ஜனவரி, 2009

my kavithai 19 : ( 19. கவிதையாய் ஒரு கதை )

19.கவிதையாய் ஒரு கதை :

ஓர் நாள்
நானும்,என் நண்பனும்
நடைவீதியில் சென்று கொண்டு இருந்தோம்.

முதல் நாள்
அவன் பேசினான்.

நான் அழகிய மலர் ஒன்றை கண்டு எடுத்தேன்
இது போல்
என் வாழ்வில் இனி மலர் கிட்டுமா
தெரியவில்லை என்றான்

நான் ஒன்றும் சொல்ல வில்லை
வந்து விட்டேன்

மறு நாளும்
அவன் பேசினான்

நான் பல மலர்களை பெற்று இருக்கிறேன் என்றான்

நான் பதில் எதுவும் சொல்லாமல்
சென்று விட்டேன்.

இன்னுமொரு நாள்
நாங்கள் சந்தித்தோம்

நான் ஓர் மலர் தோட்டமே பெற்று இருக்கிறேன் என்றான்

நான் மௌனமாக சென்று விட்டேன்

பல நாட்களுக்கு பிறகு
நாங்கள் சந்தித்தோம்

அன்று
நான் பேசினேன்
அவன் மௌனமாக இருந்தான்
அவன் மௌனத்தை கலைத்து
உண்மையை அறிந்தேன்

மலர்கள் அதிகம் வேண்டும் என்பதற்காக
விஷ செடியையும் வளர்த்து விட்டேன்
அதனால் இன்று
நான் முதன் முதலாய்
நேசித்த என் அழகிய மலரும்
கருகி போய் விட்டது

இன்று நான் தனிமையில்
கண்களில் ஓரம் ஈரத்தோடு

உயிர் வாழ சுவாசம் முக்கியம் தான்
சுவாசம் வேண்டும் என்பதற்காக
எல்லா காற்றையும் சுவாசித்தால்
ஜீவன் இருக்காது

அது போல் தான் நல்ல நட்பும்

நட்பு வேண்டும் என்பதற்காக
எல்லோரையும் நண்பனாக சேர்த்தால்
முடிவில் உன் நல்ல நண்பர்களும் இல்லாமல்
சென்று விடுவார்கள்

செவ்வாய், 20 ஜனவரி, 2009

my kavithai 15 : ( 15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு )

15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு :

கடல் மீது ஒருவன்
தத்தளிக்கையில்
கரை மீது நின்று
உரையாடுகிறான்

கடல் மீது ஏனடா
விழுந்தாய் என்றான் ஒருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது எவ்வாறடா
விழுந்தாய் என்றான் இன்னொருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது விழுந்ததினால்
கண்ணீரினில்
விழுந்தான் இன்னுமொருவன் -
கரை மீது நின்று கொண்டு

பயனில்லா கேள்வியும்
பலனில்லா அழுகையும்
நீ கொடுத்தால்
அவன் கரை சேர்ந்து விடுவானா

எதை கொடுத்தால்
அவன் கரை சேர்வானோ
அதை செய்

அடுத்தவர் துன்பம் கண்டு
கண்ணீர் சிந்துபவனாக இருக்காதே
கண்ணீர் துடைப்பவனாக இரு

இதயத்திலோ வலி
கண்களோ கண்ணீர் சிந்துகின்றது
கைகளோ கண்ணீரை துடைக்கின்றது

கண்ணீர் சிந்தும்
கண்களாய் இருக்காதே
துடைத்து நிற்கும்
கைகளாய் இரு .

புதன், 14 ஜனவரி, 2009

my kavithai 14 : ( 14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ?)

14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ? :

இம்மண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
ஒவ்வோர் மைந்தனும்
கண்ணீர் சிந்துவானே - உனக்காக

அதுவில்லாமல்

ஓர் பொண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
கடைசி ஜீவனும் கூட
ஓர் துளி கண்ணீர் சிந்தலாகாது

தண்ணீரை நிலைநிறுத்த
அணைக்கட்டை கட்டினான்
உன்
கண்ணீரை நீ நிலை நிறுத்த
மனமென்பதை கட்டு

ரசிகன் என்று நீ இருக்கையில்
நடிகன் என்பவன்
நடித்துக்கொண்டே தான் இருப்பான்
சினிமாவில் மட்டுமல்ல
நிஜத்திலும் தான்

கடல் அலையை தூரத்தில்
நின்று ரசித்து செல்லலாம்
இல்லை
நான் கடலில் இறங்கியே
ரசிப்பேன் என்றால்
மூச்சடைத்து விடுவாய் நண்பனே

தொண்டன் என்று நீ இருக்கையில்
அரசியல் செய்பவன்
அடித்துக்கொண்டே தான் இருப்பான்
நாட்டை மட்டுமல்ல
உன் வீட்டையும் தான்

நீ தீக்குளித்து மேலே
செல்வாய்
அவன்
நீ குளிக்க மேலே
உயர்வான்

எதை விதைக்கிறாயோ
அதுவே
மரமாக வளரும்
விதைப்பதை தவறாக விதைத்து விட்டு
பலனை மட்டும் எதிர்பார்க்கிறாயே

மாண்டு போவதால்
உன் வாழ்க்கையை
மீட்டு விடுவாயா
வாழ்ந்து பார்
வாழ்க்கை புரியும்
நீயாக நீ இருக்கையில்
மாண்டே போ
உனக்காக பலர் இருக்கையில்
மாண்டும் மீண்டும் இருப்பாய்

திங்கள், 5 ஜனவரி, 2009

my kavithai 12 : ( 12. உன் வாழ்க்கை உன் கையில்)

12. உன் வாழ்க்கை உன் கையில் :

வாழ்க்கையில்
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவனாக
நீ இருந்தால்
-உன் வாழ்க்கை உன் கையில்

நம்பிக்கையை
எந்த நிமிடமும் கைவிடாமல்
நீ இருந்தால்
-உன் வாழ்க்கை உன் கையில்

தவறுகளில்
வாழ்க்கையை திருத்திகொள்பவனாக
நீ இருந்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

வெற்றிகள்
எல்லா நிமிடமும் இறைவனால் வருவது என
நீ நினைத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

நட்பினில்
நம்பிக்கை உள்ளவரை
தேர்ந்தெடுத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

காதலில்
விட்டுகொடுக்கும் மனம் உள்ளவரை
தேர்ந்தெடுத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில

உண்மையில்
உன்னை நீ
அறியாத வரை
உலகை நீ அறிய மாட்டாய்

உன்னை நீ
அறிந்து கொண்டால்
உலகம் நாளை
உன் கையில்

குறிப்பு :
உலகை மாற்ற நினைப்பதற்கு முன்
முதலில்
உன்னை நீ மாற்று