கவிதை 32 .தேடினால் தான் வாழ்க்கை புரியும் :
இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை
எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே
இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....
HTML LINK TAMIL WEBSITES LINKS
இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....
உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
எனது தமிழ் கிறுக்கல்கள் :
அரசியல் கவிதைகள்
(3)
ஆன்மீக கவிதைகள்
(7)
கண் தானம் பற்றிய குறிப்புகள்
(5)
கவிதையாய் ஒரு பாடல்கள்
(5)
காதல் கவிதைகள்
(2)
தத்துவ கவிதைகள்
(10)
நட்பு கவிதைகள்
(4)
நம்பிக்கை கவிதைகள்
(5)
நல்ல கருத்து கவிதைகள்
(20)
நாட்டுப்பற்று கவிதைகள்
(2)
பொது கவிதைகள்
(35)
வெள்ளி, 2 அக்டோபர், 2009
வியாழன், 1 அக்டோபர், 2009
கவிதை 31 . உணர்வுகள் தான் மனிதனே :
31 . உணர்வுகள் தான் மனிதனே :
வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல
வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்
இங்கே பெண்ணுமல்ல
முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்
பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்
வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல
அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்
இங்கே ஆணுமல்ல
முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்
பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்
வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல
சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்
இங்கே மனிதனுமல்ல
முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்
பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.
பொருள் ::::::
தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.
வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல
வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்
இங்கே பெண்ணுமல்ல
முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்
பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்
வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல
அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்
இங்கே ஆணுமல்ல
முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்
பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்
வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல
சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்
இங்கே மனிதனுமல்ல
முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்
பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.
பொருள் ::::::
தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.
ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
கவிதை 30 : (30 . எனக்கான முதல் கவிதையும் இது தானோ? ) :
கவிதை 30 : எனக்கான முதல் கவிதையும் இது தானோ?:
என் கவிதையின் முதல் பயணம்
எங்கே உதயமானது?
இன்றளவும் எனக்கு தெரிய வில்லை
என் வாழ்க்கைப் பதிவில்
காயங்கள் நெஞ்சில் பதிய பதிய
வாழ்க்கை கொஞ்சம் புரிய புரிய
என்னை அறியாமலே
என் எண்ணங்கள் செதுக்கப்பட்டு
அவை எழுத்துக்களில் ஈட்டப்பட்டு
கவிதையென்பதில் முதல் அடியை
எடுத்திடவே காரணமானதே
நீரெல்லாம் சேர்ந்து
கடலாய் இருக்கையில்
அதிலே
மீன் அழுதால்
யாருக்கும் தெரிவதுமில்லை
எனது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து
கவிதையாய் இருக்கையில்
அதிலே
என் சோகமும்
யாருக்கும் புரிவதுமில்லை
இருந்தும்
துக்கத்தின் ஒரு பகுதியை
எனது எழுத்துக்களால்
என் காயத்தை துடைத்திடவே
பார்க்கிறேன்
துக்கத்தின் மறு பகுதியை
எனது எழுத்துக்களால்
பிறர் கண்ணீரை தடுத்திடவே
பார்க்கிறேன்
காயங்களிலான வாழ்க்கை
யாருக்கும் வேண்டாம்
நான் நினைக்க வில்லை
இன்பங்கள் போன்று
துன்பங்கள் வந்திடினும்
அவையெல்லாம்
எதிர்கொள்ளும் பக்குவங்கள்
இருந்திடவே நினைக்கிறேன்
துன்பமில்லாமல் இன்பமுட்டும்
வேண்டுமெனில்
மனித பிறப்பும் தேவை தானோ?
என் எழுத்துக்கள் கவிதையாகுதே
இதையெண்ணி
மகிழ்ச்சி கொள்வதா?
இல்லை
என் சோகங்கள் எழுத்துக்கள் ஆகுதே
இதையெண்ணி
வருத்தம் கொள்வதா?.
ஒன்றல்ல இரண்டல்ல
முப்பது கவிதைகள்
எவ்வாறோ என்னால்
படைக்கப்பட்டு விட்டது
நான் கவிஞனில்லை
இருந்தும்
எப்படி படைத்தேன்
இதுவரை
எனக்கும் புரிய வில்லை
எத்தனையோ கவிதைகள்
யார் யாருக்காவோ படைத்தேன்
எனக்காக - நான்
படைத்த "முதல் கவிதை"
இது தானே.
என் கவிதையின் முதல் பயணம்
எங்கே உதயமானது?
இன்றளவும் எனக்கு தெரிய வில்லை
என் வாழ்க்கைப் பதிவில்
காயங்கள் நெஞ்சில் பதிய பதிய
வாழ்க்கை கொஞ்சம் புரிய புரிய
என்னை அறியாமலே
என் எண்ணங்கள் செதுக்கப்பட்டு
அவை எழுத்துக்களில் ஈட்டப்பட்டு
கவிதையென்பதில் முதல் அடியை
எடுத்திடவே காரணமானதே
நீரெல்லாம் சேர்ந்து
கடலாய் இருக்கையில்
அதிலே
மீன் அழுதால்
யாருக்கும் தெரிவதுமில்லை
எனது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து
கவிதையாய் இருக்கையில்
அதிலே
என் சோகமும்
யாருக்கும் புரிவதுமில்லை
இருந்தும்
துக்கத்தின் ஒரு பகுதியை
எனது எழுத்துக்களால்
என் காயத்தை துடைத்திடவே
பார்க்கிறேன்
துக்கத்தின் மறு பகுதியை
எனது எழுத்துக்களால்
பிறர் கண்ணீரை தடுத்திடவே
பார்க்கிறேன்
காயங்களிலான வாழ்க்கை
யாருக்கும் வேண்டாம்
நான் நினைக்க வில்லை
இன்பங்கள் போன்று
துன்பங்கள் வந்திடினும்
அவையெல்லாம்
எதிர்கொள்ளும் பக்குவங்கள்
இருந்திடவே நினைக்கிறேன்
துன்பமில்லாமல் இன்பமுட்டும்
வேண்டுமெனில்
மனித பிறப்பும் தேவை தானோ?
என் எழுத்துக்கள் கவிதையாகுதே
இதையெண்ணி
மகிழ்ச்சி கொள்வதா?
இல்லை
என் சோகங்கள் எழுத்துக்கள் ஆகுதே
இதையெண்ணி
வருத்தம் கொள்வதா?.
ஒன்றல்ல இரண்டல்ல
முப்பது கவிதைகள்
எவ்வாறோ என்னால்
படைக்கப்பட்டு விட்டது
நான் கவிஞனில்லை
இருந்தும்
எப்படி படைத்தேன்
இதுவரை
எனக்கும் புரிய வில்லை
எத்தனையோ கவிதைகள்
யார் யாருக்காவோ படைத்தேன்
எனக்காக - நான்
படைத்த "முதல் கவிதை"
இது தானே.
கவிதை 29. (மனமென்ன மனமென்ன சொல்லு) ::::
29.மனமென்ன மனமென்ன சொல்லு ::::
மனமென்ன மனமென்ன சொல்லு
உன்
மனசாட்சி படி நீயும் சொல்லு
மனசாட்சி இல்லேனு சொன்னால்
உன்
மனதினை மனதினை கொல்லு
உதவும் எண்ணங்கள் இருந்தால்
மனசாட்சி உனக்குள்ளும் உண்டு
உதவும் எண்ணங்கள் தொலைத்தால்
மனசாட்சி மண்ணுக்குள் உண்டு
பார்வையை நீ கொஞ்சம் தொலைத்தால்
மனதினை நீ கொஞ்சம் தொலைத்தால்
நண்பா
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
நீயும்
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
உயிரினை நேசிக்க மறந்தால்
நீயும் ஆத்தீகன் என்பவன் இல்லை
நண்பா
நீயும் நாத்தீகன் என்பவன் இல்லை
மனிதனை மனிதனை நேசி
அது உன்னாலே முடியாமல் போனால்
மனமென்ன மனமென்ன சொல்லு
உன்
மனசாட்சி படி நீயும் சொல்லு
மனசாட்சி இல்லேனு சொன்னால்
உன்
மனதினை மனதினை கொல்லு
உதவும் எண்ணங்கள் இருந்தால்
மனசாட்சி உனக்குள்ளும் உண்டு
உதவும் எண்ணங்கள் தொலைத்தால்
மனசாட்சி மண்ணுக்குள் உண்டு
பார்வையை நீ கொஞ்சம் தொலைத்தால்
மனதினை நீ கொஞ்சம் தொலைத்தால்
நண்பா
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
நீயும்
தெரிந்தே தான் வாழ்க்கையை தொலைப்பாய்
உயிரினை நேசிக்க மறந்தால்
நீயும் ஆத்தீகன் என்பவன் இல்லை
நண்பா
நீயும் நாத்தீகன் என்பவன் இல்லை
மனிதனை மனிதனை நேசி
அது உன்னாலே முடியாமல் போனால்
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........
கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........
வெற்றி
இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்
"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது
வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு
தோல்வி
உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்
"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்
தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு
தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்
தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி
தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......
வெற்றி
இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்
"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது
வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு
தோல்வி
உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்
"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்
தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு
தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்
தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி
தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009
My kavithai 27 (27 . நம்பிக்கை விதைகள் ) - (கவிதையாய் ஒரு பாடல் ) :
27 th Kavithai : நம்பிக்கை விதைகள் (1st page) - (கவிதையாய் ஒரு பாடல் ) :
வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்
(வாழ்ந்திடலாம் ....)
உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு
நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா
(வாழ்ந்திடலாம் ...)
தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே
தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே
தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு
(வாழ்ந்திடலாம் ...)
வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்
மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா
நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா
(வாழ்ந்திடலாம் ....)
வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்
(வாழ்ந்திடலாம் ....)
உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு
நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா
(வாழ்ந்திடலாம் ...)
தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே
தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே
தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு
(வாழ்ந்திடலாம் ...)
வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்
மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா
நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா
(வாழ்ந்திடலாம் ....)
திங்கள், 20 ஜூலை, 2009
My kavithai 26 ( 26 . சரீரத்தின் உண்மை ) :
26: சரீரத்தின் உண்மை :
கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை
கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.
கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்
குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே
ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே
அங்ஙனமே
ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே
குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே
தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை
எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு
உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்
கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை
கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.
கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்
குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே
ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே
அங்ஙனமே
ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே
குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே
தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை
எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு
உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)