வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

My kavithai 27 (27 . நம்பிக்கை விதைகள் ) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

27 th Kavithai : நம்பிக்கை விதைகள் (1st page) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்

(வாழ்ந்திடலாம் ....)

உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ...)

தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே

தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே

தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு

(வாழ்ந்திடலாம் ...)

வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்

மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ....)

திங்கள், 20 ஜூலை, 2009

My kavithai 26 ( 26 . சரீரத்தின் உண்மை ) :

26: சரீரத்தின் உண்மை :

கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை

கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.

கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்

குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே

ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே

அங்ஙனமே

ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே

குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே

தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை

எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு

உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்

திங்கள், 13 ஜூலை, 2009

My kavithai 25 . (25 : இதயமதில் என் பார்வை ) :

25 . இதயமதில் என் பார்வை :

விழியிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் விழியின் ஓர் பார்வையிலே
"நற்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"நற்செயல் தனை செய்திடு"

மறு விழியின் மறு பார்வையிலே
"தீஞ்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"தீஞ்செயல் தனை விட்டுடு"

கையிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் கையின் ஓர் பார்வையிலே
"உனை முழுதும் காத்திடு"
மறு கையின் மறு பார்வையிலே
"பிறர் தனை தூக்கிடு"

காலிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஓர் காலின் ஓர் பார்வையிலே
"நல்லதை எட்டி முன்னேறு"
மறு காலின் மறு பார்வையிலே
"தீயதை எட்டி உதைத்திடு"

எல்லாம் இரு வழிப் பாதையாக
இருந்தும்
இதயமது ஓர் வழிப் பாதையாக
ஆனதேனோ?

இதயமதில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்

ஜீவன் பிறப்பதும் ஓர் முறை தான்
ஜென்மம் சாய்வதும் ஓர் முறை தான்
காதல் உதிப்பதும் ஓர் இடம் தான்
காதல் மறைவதும் அவ் விடம் தான்

காதலது எண்ணிக்கை கூடினால்
அது காதலுமல்ல
நட்பது உறவும் மாறினால்
அது நட்புமல்ல

காதல் ஓர் பெண்ணோடே
பிறக்க வேண்டும்
காதல் அப் பெண்ணோடே
முடிய வேண்டும்

நட்பு அது நட்பாகவே
பிறக்க வேண்டும்
நட்பு அது நட்பாகவே
முடிய வேண்டும்

எண்ணிக்கை கூடினாலும்
உறவுகள் மாறினாலும்
அது நேசம் அல்ல
அது சுயநலத்தின் அடையாளமே

இதயம் ஓர் வழிப்பாதையே
நன்மை மட்டுமே நிலைத்திடும் - இங்கே

திங்கள், 1 ஜூன், 2009

My kavithai 24 : ( 24 . நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர் )

24.நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்,ஆதாலால் கண் தானம் செய்திடுவேர்

ஜனனத்தின் வருகையும் அறியாது
இனிவொரு
ஜென்மம் உண்டெனவும் தெரியாது

படைத்தவன் அன்றி
யார் அறிவார்?.

மண்ணில் பிறந்த
யாவருக்கும்
மகத்தான வரம் உண்டென
அறியலாகாது

ஜீவனை உயிர்ப்பிக்கின்ற திறன்
கடவுள் என்போம்
ஆம்
நீயும் ஓர் நாள் கடவுளாகலாம்.

கண் தானம் செய்கையில்
காட்சிப்பொருளாய்
நீயே அவனுக்கு கடவுளாகிறாய்

புதன், 27 மே, 2009

my kavithai 23 : (23 . காதல் ஒரு வரமா?. அல்லது சாபமா?. )

23 . காதல் ஒரு வரமா?. அல்லது சாபமா?.

யார் செய்த பாவம் இங்கே
உன் கண்ணில் நான் விழுந்தேன்

யார் செய்த பாவம் அங்கே
என் கண்ணில் நீ விழுந்தாய்

இது காதல் என்பதா
இல்லை சாபம் என்பதா

இது நேசம் என்பதா
இல்லை வேஷம் என்பதா
உயிரே சொல்

மனம் காயமுற்று
தனியாய் இருக்கையில்
என் உள்ளினுள்ளே
உறவாட வந்தாயே

மனக் காயக்கதைகள்
எல்லாம் சொல்லிட
உயிர் மருந்தாவேன்
நீயே சொல்லிட

காதலில் விழுந்தேனே
உன்
காதலால் வீழ்ந்தேனே

பாறையாக என்
மனமே இருக்கையில்

சிற்பியாக நீயே
இங்கு வருகையில்

பாறையும் சிலையானதே
எனதுள்ளமும் உனதானதே

கண் கொண்டு பார்த்தால்
கல் மட்டும் தோன்றும்

மனக்கண் கொண்டு பார்த்தால்
கடவுளே கண்முன் தோன்றும்

ஒன்றல்ல இரண்டல்ல
வாழ்க்கை பதிவின் - பலதிலும்
நம்பிக்கை விதைகளை
விதைத்தேனே

எதன் மீதும் நம்பிக்கை இல்லையெனின்
நானே தந்திடுவேன் நம்பிக்கையினை
என் மீதே நம்பிக்கை இல்லையெனின்
நான் எங்கு போய் காதலை உன்னிடத்தில் தேடுவேன்?.

வாழ்வில் எதுவில்லை எனினும்
ஓர் நொடி கூட வாழ்ந்திடலாம்

நம்பிக்கை இல்லையெனின்
ஓர் நொடி கூட வாழ்ந்திட முடியாது
இதில் காதல் மட்டும் என்ன விதி விலக்கா?.

தனியாக இருக்கையில்
துன்பம்கூட தூசியானது

காதலின் வருகையில்
இன்பம்கூட துன்பமானது

காதல் எனும் மரத்தில்
உள்ளம் எனும் கூட்டை
கட்ட நினைத்தேன்

மரமே சாய்ந்த பிறகு
கூட்டிற்கு என்ன வேலை?

உன்னாலே மீண்டும்
மனம் கல்லானதே

ஓர் நொடி புன்னகையில்
உன்னிடத்தில் தொலைந்தேன்
ஓர்நொடியால் இன்று
என்புன்னகையையே மறந்தேன்

காதல் இது வரமா?. சாபமா?.

ஞாயிறு, 10 மே, 2009

my kavithai 22 : (22. ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம் )

22.ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

அர்த்தமுள்ளதும் ஓர் நொடியில் தான்
ஆயிரமுள்ளதும் ஓர் நொடியில் தான்
அச்சம் வருவதும் ஓர் நொடியில் தான்
அகண்டு நிற்பதும் ஓர் நொடியில் தான்

(ஓர் நொடி போதும் )

மண் ஆசையில் மாண்டு போவதும்
ஓர் நொடியில் தான்

பெண் ஆசையில் பித்தன் ஆவதும்
ஓர் நொடியில் தான்

இதயம் தொலைத்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

நினைவை இழந்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

வார்த்தை தவறி விழுவதும்
ஓர் நொடியில் தான்

வாழ்க்கை மாறி விடுவதும்
ஓர் நொடியில் தான்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

(ஓர் நொடி போதும் )

நட்பினில் யாவரும் வருவதற்க்கு
ஓர் நொடி போதும்

நட்பினில் சிறந்தவன் கிடைப்பதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

நாத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் நொடி போதும்

ஆத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் யுகம் வேண்டும்

காதலில் விழுவதற்கு
ஓர் நொடி போதும்

விழுந்தால் எழுவதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

தவறு செய்திட
ஓர் நொடி போதும்

வாழ்க்கை மாறிட
ஓர் யுகம் வேண்டும்

யுத்தம் பிறந்திட
ஓர் நொடி போதும்

அமைதி திறிம்பிட
ஓர் யுகம் வேண்டும்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

புதன், 28 ஜனவரி, 2009

my kavithai 21 : ( 21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ? )

21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ?

(உடலில் உள்ள குறை எல்லாம் ஊனம் இல்லை,உள்ளம் குறையானால் அது தான் ஊனம் ( அவரும் மனிதர் தான்,நேசிப்போம் அந்த ஜீவனையும் தான்.நண்பர் ஒருவருக்காக படைக்க பட்டது - அவருக்கே சமர்பனம் இது ) ) :

விடையறியா உலகத்தில்
வினாக்களின் கூட்டத்தில்
ஓர் ஜீவனாய்
நாமும் பயணிக்கின்றோம்

விடையறியும் முன்னே
இறங்க நினைக்கையில்
பாதையும் வேறாகி
பயணமும் முடிகிறது

வினாக்களே பிறக்க
வில்லையெனில்
பயணமும் எதற்கோ ?

பாதியில் இறங்கத்தான்
உன் பயணமென்றால்
நீ
பயனியானது ஏனோ?

கண் இருந்தும் பார்வையில்லை
மொழி தெரிந்தும் பேசவில்லை
நடை அறிந்தும் நடக்கவில்லை

வினாக்கள் எத்தனை பிறந்தாலும்
விடையறிய ஓர் ஜீவனாய்
அவனும் பயணிக்கிறான்

அவனுக்கோ
ஊனம் ஓர் தடையில்லை
உனக்கோ
உள்ளமே ஓர் ஊனமானது

நண்பனே
நம்பிக்கையை அவரிடம்
பெற்றுக்கொள்
வாழ்க்கையை அவரிடம்
கற்றுக்கொள்

வாழ்ந்து பார்
உனக்கான ஓர் உலகம்
நிட்சயம் உண்டு

வாழ்ந்து பார்க்காமல்
மடிந்து விடாதே