வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

புதன், 14 ஜனவரி, 2009

my kavithai 14 : ( 14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ?)

14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ? :

இம்மண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
ஒவ்வோர் மைந்தனும்
கண்ணீர் சிந்துவானே - உனக்காக

அதுவில்லாமல்

ஓர் பொண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
கடைசி ஜீவனும் கூட
ஓர் துளி கண்ணீர் சிந்தலாகாது

தண்ணீரை நிலைநிறுத்த
அணைக்கட்டை கட்டினான்
உன்
கண்ணீரை நீ நிலை நிறுத்த
மனமென்பதை கட்டு

ரசிகன் என்று நீ இருக்கையில்
நடிகன் என்பவன்
நடித்துக்கொண்டே தான் இருப்பான்
சினிமாவில் மட்டுமல்ல
நிஜத்திலும் தான்

கடல் அலையை தூரத்தில்
நின்று ரசித்து செல்லலாம்
இல்லை
நான் கடலில் இறங்கியே
ரசிப்பேன் என்றால்
மூச்சடைத்து விடுவாய் நண்பனே

தொண்டன் என்று நீ இருக்கையில்
அரசியல் செய்பவன்
அடித்துக்கொண்டே தான் இருப்பான்
நாட்டை மட்டுமல்ல
உன் வீட்டையும் தான்

நீ தீக்குளித்து மேலே
செல்வாய்
அவன்
நீ குளிக்க மேலே
உயர்வான்

எதை விதைக்கிறாயோ
அதுவே
மரமாக வளரும்
விதைப்பதை தவறாக விதைத்து விட்டு
பலனை மட்டும் எதிர்பார்க்கிறாயே

மாண்டு போவதால்
உன் வாழ்க்கையை
மீட்டு விடுவாயா
வாழ்ந்து பார்
வாழ்க்கை புரியும்
நீயாக நீ இருக்கையில்
மாண்டே போ
உனக்காக பலர் இருக்கையில்
மாண்டும் மீண்டும் இருப்பாய்