வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

செவ்வாய், 20 ஜனவரி, 2009

my kavithai 17 : ( 17. காதலின் ஆழம் )

17 . காதலின் ஆழம் :

களவும் கற்று மற என்றார்கள்
காரணம் தெரியவில்லை

ஆனால்
காதலை சொல்லவில்லை
ஏனோ புரியவில்லை

நினைத்தவுடன் வருவதற்கும்
நினைத்தவுடன் மறப்பதற்கும்

காதல் ஒன்றும்
வாழ்க்கையின் வழி அல்ல
அது
வாழ்க்கையின் வலி.

வெற்றி பெற்றால் மட்டுமே காதல்
நினைக்க வேண்டும் என்றால்

அவன் காதலை அறியவில்லை
என்று தான் அர்த்தம்

தோல்வி அடைந்தால் காதலை
மறக்க வேண்டும்

என்று சொன்னால் உண்மையில்
அவன் காதலிக்கவில்லை
என்று தான் அர்த்தம் .

மனதின் ஓரமாய்
அந்த காதல் ஜனனத்தின்
முடிவு வரை
இருந்தால் தான்
அது உண்மையான காதல்
(காதலில் வெற்றியோ ,தோல்வியோ ,மனதின் ஓரமாய் அதை நினைத்திரு.).

my kavithai 16 : ( 16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) )

16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) :

வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை

காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை

நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை

நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை

பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை

நட்பு அழகானது தான்
காதல் வராத வரை

my kavithai 15 : ( 15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு )

15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு :

கடல் மீது ஒருவன்
தத்தளிக்கையில்
கரை மீது நின்று
உரையாடுகிறான்

கடல் மீது ஏனடா
விழுந்தாய் என்றான் ஒருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது எவ்வாறடா
விழுந்தாய் என்றான் இன்னொருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது விழுந்ததினால்
கண்ணீரினில்
விழுந்தான் இன்னுமொருவன் -
கரை மீது நின்று கொண்டு

பயனில்லா கேள்வியும்
பலனில்லா அழுகையும்
நீ கொடுத்தால்
அவன் கரை சேர்ந்து விடுவானா

எதை கொடுத்தால்
அவன் கரை சேர்வானோ
அதை செய்

அடுத்தவர் துன்பம் கண்டு
கண்ணீர் சிந்துபவனாக இருக்காதே
கண்ணீர் துடைப்பவனாக இரு

இதயத்திலோ வலி
கண்களோ கண்ணீர் சிந்துகின்றது
கைகளோ கண்ணீரை துடைக்கின்றது

கண்ணீர் சிந்தும்
கண்களாய் இருக்காதே
துடைத்து நிற்கும்
கைகளாய் இரு .