வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கவிதை 40 : நீயே உன்னை செதுக்கிடும் அழகிய சிற்பி :

கவிதை 40 : நீயே உன்னை செதுக்கிடும் அழகிய சிற்பி :

எத்திசையினும் நீ சென்றாலும்
எந்நாடிடும் நீ சென்றாலும்

பொருட்களின் அழகிய வடிவம்
பொருட்களை அழகாய் செதுக்குதலே

இக்கணமே மெய்களென நம்பினாலே
அக்கணமே பொய்களோடு கலந்திடுமே

நம் எண்ணம் பொய்களோடு
அந் நொடியில் கலந்திடுமே

சிற்பத்தின் உண்மை யாவும்
பாறையெனும் பொய்களால் சூழ்ந்து
பொய்களாவும் மெய்களாய் காட்சியளிக்குதே

இயற்கையின் ரகசியங்களும்
வாழ்வின் ரகசியங்களும்

இயற்கையை நேசிக்கையில்
அழகாய் தென்படுமே

வாழ்வின் விடைகளும்
அழகாய் கிடைத்திடுமே

பாறைக்குள் மறைந்திருக்கும்
அழகிய சிற்பமாய்
உனக்குள் மறைந்திருக்குமே

நீ தேடிடும் வெற்றியும்
நீ தேடிடும் நம்பிக்கையும்
நீ தேடிடும் சரித்திரமும்
உனக்குள் மறைந்திருக்குமே

பாறையை செதுக்கிடும் சிற்பியாய்
உன்னை செதுக்கிடும் ஒருவனாய்

ஓர் நாள் ஒருவன் வருகையில்

வெளியிலிருக்கும் பொய்கள் மறைந்து
உன்னிளிருக்கும் மெய்கள் மின்னிடுமே

நினைத்துப் பார்க்கையில்

புதிதாய் எதுவும் இங்கு வருவதில்லை
புதைந்து இருப்பதே இங்கு வருவதுண்டு

ஒவ்வொரு முறையும் புதிதாய்
சிற்பம் செதுக்க இருக்கையில்
சிற்பியை தேடி அலைந்திடாதே
நீயும் என்றும் தொலைந்திடாதே

பாறையை செதுக்கும் சிற்பியாய்
நீயே மாறிடு
சிற்பம் பேசிடும் திறனை
நீயே கொடுத்திடு

பொருள் : எந்த பாறையும் செதுக்குவதால் சிற்பம் பிறப்பதில்லை.ஒவ்வொரு சிற்பமும் நான்கு பாறையால் சூழ்ந்துள்ளது என்பதே மெய்.அது போலவே எல்லா மனிதர்களுக்குள்ளும் வெற்றியும்,நம்பிக்கையும் புதைந்தே உள்ளது.ஏதோ ஒரு விதத்தில் அது வெளி வராமல் உள்ளது.நம்மை ஊக்கிவிக்க ஒருவர் வருகையில் நம் திறமைகள் எல்லாம் அழகாய் வெளி வந்திடும்.ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவரை எதிர்பார்க்காமல் நாமே நம்மை செதுக்கும் சிற்பியாய் மாறி விட வேண்டும் என்பது இதன் பொருள்.வாழக்கை புதிராய் இருக்கும் வரை தான் வாழ்க்கை அழகு...