வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

புதன், 28 ஜனவரி, 2009

my kavithai 21 : ( 21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ? )

21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ?

(உடலில் உள்ள குறை எல்லாம் ஊனம் இல்லை,உள்ளம் குறையானால் அது தான் ஊனம் ( அவரும் மனிதர் தான்,நேசிப்போம் அந்த ஜீவனையும் தான்.நண்பர் ஒருவருக்காக படைக்க பட்டது - அவருக்கே சமர்பனம் இது ) ) :

விடையறியா உலகத்தில்
வினாக்களின் கூட்டத்தில்
ஓர் ஜீவனாய்
நாமும் பயணிக்கின்றோம்

விடையறியும் முன்னே
இறங்க நினைக்கையில்
பாதையும் வேறாகி
பயணமும் முடிகிறது

வினாக்களே பிறக்க
வில்லையெனில்
பயணமும் எதற்கோ ?

பாதியில் இறங்கத்தான்
உன் பயணமென்றால்
நீ
பயனியானது ஏனோ?

கண் இருந்தும் பார்வையில்லை
மொழி தெரிந்தும் பேசவில்லை
நடை அறிந்தும் நடக்கவில்லை

வினாக்கள் எத்தனை பிறந்தாலும்
விடையறிய ஓர் ஜீவனாய்
அவனும் பயணிக்கிறான்

அவனுக்கோ
ஊனம் ஓர் தடையில்லை
உனக்கோ
உள்ளமே ஓர் ஊனமானது

நண்பனே
நம்பிக்கையை அவரிடம்
பெற்றுக்கொள்
வாழ்க்கையை அவரிடம்
கற்றுக்கொள்

வாழ்ந்து பார்
உனக்கான ஓர் உலகம்
நிட்சயம் உண்டு

வாழ்ந்து பார்க்காமல்
மடிந்து விடாதே