வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

சனி, 17 அக்டோபர், 2009

கவிதை 34 . வரதட்சணை :

34. வரதட்சணை :

பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்கிறானே மனிதன்
இருந்தும் தன்
மெய்ப்பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்வது ஏனோ?

பெண் ஒன்று தேடும் இடத்திலே
பொன் ஒன்றும் அங்கே தேடுகிறான்

எங்கெங்கு ஆண்மகன்கள்
தந்தை சொல்லுக்கு மிரண்டு
தாய் சொல்லுக்கு மகிழ்ந்து
வரதட்சணை எனும் பண நோயை
இசைவுடன் ஏற்றுக் கொள்கிறானோ

அங்கணமே
பொருளற்ற உடலாகிறான்
சிந்தனையற்ற மனிதனாகிறான்

துன்பம் எது வந்திடினும்
இன்பம் எது வந்திடினும்

வாழ்வில் எந்நொடியும்
உன்னோடு ஓர் ஜீவன்
உன் துணையாகிய துணைவியே

ஆண்மைக்கு அழகு
பெண்மையை காப்பது
பொருளை காப்பதல்ல

பெண்ணை விலை பேசி
உன்னை விற்று விடாதே
ஆண்மகனே

பொருள் : சில் ஆண்மகன்கள் தந்தை சொல்லுக்கு பயந்து,தாய் சொல்லுக்கு மகிழ்ந்து வரதட்சணை என்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.இங்கே பொருளற்ற உடலாக அவன் மட்டுமல்ல அவன் பெற்றோரும் உண்டு.வயதில் பெரியவர்கள் எல்லோரும் இங்கே பெரியவர்கள் அல்ல.எண்ணங்களால் உயர்ந்தவர்கள் மட்டுமே இங்கே பெரியவர்கள்.வரதட்சணையை ஒழிப்போம்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.