வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

வியாழன், 22 ஜனவரி, 2009

my kavithai 20 : ( 20 . ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

20.ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

பூக்களில் ஓர் பூ மட்டும்
மாலையாகிவிடாது

மரங்களில் ஓர் மரம் மட்டும்
தோப்பாகிடாது

எழுத்துக்களில் ஓர் எழுத்து மட்டும்
வார்த்தையாகிவிடாது

நூல்களில் ஓர் நூல் மட்டும்
நூலகமாகிவிடாது

கற்களில் ஓர் கல் மட்டும்
கட்டிடமாகிவிடாது

நீர்களில் ஓர் துளி மட்டும்
கடலாகிவிடாது

எல்லாம் சேர்ந்து இருந்தால் தான்
ஓர் கோர்வையாக உருமாறும் .

வாழ்க்கையும் இது போல தானே

மதத்தின் பெயரால்
ஜாதியின் பெயரால்
இனத்தின் பெயரால்
நாம் வேறுபட்டு இருந்தாலும்

மனம் என்ற ஒன்றில்
இணைந்தே இருப்போம்

மதம் என்பது
மனதை தெளிவுபடுத்ததானே அன்றி
மனதை காயப்படுத்த அல்ல

மதத்தின் பெயரால் பிரிவு வேண்டாம்
மனங்களால் நாம் ஒன்றாய்
இருப்போம்

நட்புடன் பழகுவோம்
என்றும் நட்புடன் மட்டும் இருப்போம்

கருத்துகள் இல்லை: