33 . ராணுவ வீரனே முதல் குடிமகன் : (ஓர் ரயில் பயணத்தின் போது ராணுவ வீரர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்டதை இங்கே கவிதை வடிவில் கொடுத்து இருக்கிறேன்.இது ஒரு உண்மை பதிவு )
எட்டாத உயரமெல்லாம்
எட்டிச் சென்றாய்
குளிர் தொட்டாலும்
நீயே தான்
தொடர்ந்து சென்றாய்
மலை உனை தொட்டாலும்
வெயில் உனை சுட்டாலும்
உயிர் உனை விட்டாலும்
உன் எண்ணம் எல்லாம்
ஒன்றிலே வைத்தே சென்றாய்
இரக்கமில்லா எதிரிகள் ஒரு புறம்
உறக்கமில்லா இரவுகள் மறுபுறம்
குண்டு சப்தத்தின்
ஒலிகள் மட்டும்
அங்கே ஓயாது
ஓயாத சப்தத்தின் நடுவிலே
உயிர் நீத்தது
எதிரியின் உயிர் மட்டுமின்றி
உன்
தோழனின் உயிருமாகும்
இவ்வுண்மை காலங்களால்
சில நேரம் பல பேர்
அறிய முடியாதது
இருந்தும்
அது குற்றமில்லை
நாலு புறமும் எதிரிகள்
சூழ்கையில்
அதை வென்றிட
நாலுபுறமும் ராணுவம்
சூழ்கையில்
எந்தப் பக்கம் எதிரிகள்
எந்தப் பக்கம் ராணுவம்
ஏதுமறியாது தனியாய்
நீ முன்னேறுகையில்
சப்தமில்லா அந்நொடியில்
புதர் நடுவே
மெல்லிய உரசல்கள்
---அது மனித ஊட்டம்
---மனசை சலனப்படுத்துது
எதிரியென நினைத்து
சுட்டுப் பார்க்கையில்
உயிர் நீத்தது
எதிரியல்ல
உயிர் தோழன்
என்கையில்
அந்நிமிடம் நீ
துடிக்கும் துடிப்புகள்
யார் அறிவார் தோழா?.
இருந்தும் முன்னேறுவாய்
எதிரிகளை பந்தாடுவாய்
உன் போல்
சுயநலமில்லா நாட்டுப்பற்று
வேறு எங்கு காண?
யார் யாரோ நாட்டின்
முதல் குடிமகன் என்கிறார்கள்
என்னை கேட்டால்
தோழா
நீயே பாரத நாட்டின்
முதல் குடிமகன்
நீயே இந்நாட்டின்
சுயநலமில்லா பாதுகாவலன்
வாழ்க உன் புகழ்
வளர்க உன் குலம்
ஜெய் ஹிந்த் .....
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....
HTML LINK TAMIL WEBSITES LINKS
இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....
உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
எனது தமிழ் கிறுக்கல்கள் :
அரசியல் கவிதைகள்
(3)
ஆன்மீக கவிதைகள்
(7)
கண் தானம் பற்றிய குறிப்புகள்
(5)
கவிதையாய் ஒரு பாடல்கள்
(5)
காதல் கவிதைகள்
(2)
தத்துவ கவிதைகள்
(10)
நட்பு கவிதைகள்
(4)
நம்பிக்கை கவிதைகள்
(5)
நல்ல கருத்து கவிதைகள்
(20)
நாட்டுப்பற்று கவிதைகள்
(2)
பொது கவிதைகள்
(35)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக