வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

வியாழன், 26 நவம்பர், 2009

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

கவிதை 38 : எல்லையில்லா நேசம் எங்கும் வைத்திராதே:

மழை பெய்கின்ற வேளையிலே!
மனம் சுடுகின்ற வெயில்
நோக்கி செல்லுது

வெயில் சுடுகின்ற வேளையிலே!
மனம் நனைகின்ற மழை
நோக்கி செல்லுது

சுவை பிறக்கின்ற வேளையிலே!
மனம் கடுக்கின்ற காரம்
நோக்கி செல்லுது

காரம் கடுக்கின்ற வேளையிலே!
மனம் இனிக்கின்ற சுவை
நோக்கி செல்லுது

அளவுக்கு அதிகமானால்
அமிர்தமும் நஞ்சென
சொல் உண்மையன்றே!

மழை மீது நேசம் அதிகமானாலும்!
வெயில் மீது நேசம் அதிகமானாலும்!
உயிர் மீது நேசம் அதிகம்னானாலும்!

உடல் வலிமை இழப்பது நிஜமன்றோ!
உயிர் உடலை இழப்பது உண்மையன்றோ!

நேசம் எல்லா இடத்தும் வைத்திரு!
இருந்தும் எல்லை கடந்த
நேசம் கொஞ்சம் தவிர்த்திரு!.

பொருள் : நாம் எங்கே நேசம் அதிகம் கொள்கிறோமோ,அந்நொடியே நாம் பலவீனம் அடைகிறோம் என்பதே இதன் பொருள்.

கருத்துகள் இல்லை: