வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

வியாழன், 1 அக்டோபர், 2009

கவிதை 31 . உணர்வுகள் தான் மனிதனே :

31 . உணர்வுகள் தான் மனிதனே :

வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல

வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே பெண்ணுமல்ல

முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்

பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்

வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல

அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே ஆணுமல்ல

முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்

பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்

வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல

சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்

இங்கே மனிதனுமல்ல

முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்

பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.




பொருள் ::::::

தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.

கருத்துகள் இல்லை: